sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வருடமலர்/2025 மார்சில் நடந்த நிகழ்வுகள்

2025 மார்சில் நடந்த நிகழ்வுகள்

2025 மார்சில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம்

மார்ச்1: சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல தலைவராக அமுதா பதவியேற்பு.

மார்ச்8: விருதுநகர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினமும் காலை மணி 6:00 - 10:00 வழிபட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி.

மார்ச்17: சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க., வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.

மார்ச்22: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் 23 கட்சிகள் தீர்மானம்.

மார்ச்25: கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனி 60, காலமானார்.

மார்ச்26 : சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மஹாராஷ்டிராவின், ஈரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொலை.

* அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் 76, காலமானார்.

இந்தியா

மார்ச்2: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன் அரசியல் வாரிசாக அறிவித்த சகோதரர் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கினார்.

மார்ச்4: அகிம்சை, உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலகின் முதல் அமைதி மையம் ஹரியானாவின் குருகிராமில் தொடங்கப்பட்டது.

மார்ச்5: இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சோலார் மின் உற்பத்தி நிலையம் குஜராத் கொசம்பாவில் திறப்பு.

மார்ச்9: மத்திய பிரதேசம் மாதவ், இந்தியாவின் 58வது புலிகள் காப்பகமாக அறிவிப்பு.

மார்ச்17: மகாராஷ்டிரா பிவான்டி நகரில் மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு முதன்முறையாக கோயில் திறப்பு.

* நாக்பூரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் நினைவிடத்தை அகற்ற கோரி போராட்டம். 30 பேர் காயம்.

* டில்லியில் பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் சந்திப்பு. ராணுவம், கல்வி, பருவநிலை மாறுபாடு உட்பட ஆறு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்ச்19: பணக்கார எம்.எல்.ஏ., பட்டியலில் மஹாராஷ் டிராவின் பராக் ஷா (பா.ஜ., ரூ. 3400 கோடி) முதலிடம்.

மார்ச்20: சத்தீஸ்கரில் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்ட எல்லையில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 30 நக்சலைட்கள் பலி.

மார்ச்24: எம்.பி.,க்களுக்கான மாத ஊதியம் ரூ. 1.24 லட்சம் (முன்பு ரூ. 1 லட்சம்), பென்சன் ரூ. 31 ஆயிரம் (ரூ. 25,000) என உயர்வு.

மார்ச்25: ஜம்மு காஷ்மீரில் பிரிவினையை வலியுறுத்தும் ஹூரியத் அமைப்பில் இருந்து ஜே.கே.மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் வெளியேறின.

மார்ச்30: சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில் 50 நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.

மார்ச்31: பிரதமரின் தனி செயலராக நிதி திவாரி நியமனம்.

உலகம்

மார்ச்1: உருகுவே அதிபராக யமன்டு ஒர்சி பதவியேற்பு.

* அமைதி பேச்சு வார்த்தைக்கு உடன்படாததால் உக்ரைனுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியது.

* பிரேசிலில் 'வியடினா - 19' என்ற பசு மாடு ரூ. 40 கோடிக்கு ஏலமாகி கின்னஸ் சாதனை படைத்தது. எடை 1101 கிலோ இது இந்தியாவின் 'நெலார்' பசு இனத்தை சேர்ந்தது.

மார்ச்2: அமெரிக்காவின் தேசிய அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்.

மார்ச்9: சிரியாவில் அரசு படை - முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் மோதல். 1000 பேர் பலி.

மார்ச்11: மொரீஷியஸ் உயரிய விருதை வென்ற முதல் இந்தியரானார் பிரதமர் மோடி.

* பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இருந்து பெஷாவருக்கு 400 பேர் சென்ற பயணிகள் ரயிலை, பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் கடத்தல். ராணுவ தாக்குதலில் 27 பயங்கரவாதிகளும், எதிர் தாக்குதலில் ரயில் டிரைவர் உட்பட 10 பேர் பலி. 200 பிணை கைதிகள் விடுவிப்பு.

* உலகில் 2020 - 2024ல் ஆயுத இறக்குமதியில் இந்தியாவை முந்தியது உக்ரைன்.

மார்ச்12: மியான்மர் - தாய்லாந்து எல்லையில் மோசடி நிறுவனங்களில் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்பு.

மார்ச்14: கனடா பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு.

மார்ச்17: 40 ஆண்டுக்குப்பின் மேற்கு ஆசிய நாடான ஆர்மீனியா - அஜர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.

* அமெரிக்க அதிபர் டிரம்பின் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கணக்கு துவக்கினார்.

* டிரினிடாட் டொபாகோ பிரதமராக ஸ்டூவர்ட் யங் பதவியேற்பு.

மார்ச்18: சீனாவின் பி.ஒய்.டி., மின்சார கார் நிறுவனம், ஐந்து நிமிட சார்ஜில் 400 கி.மீ., துாரம் செல்லும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

மார்ச்21: லண்டன் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் மின்தடை. நாள் முழுவதும் விமான சேவை பாதிப்பு.

* நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ நன்தி பதவியேற்பு.

மார்ச்26: தென் கொரியா யுசியாங், சான்சியாங் நகரில் கட்டுத்தீ. 27 ஆயிரம் பேர் வெளியேற்றம். 27 பேர் பலி.

மார்ச்28: உலக பால் உற்பத்தியில் இந்தியா (23.90 கோடி மெட்ரிக் டன்) முதலிடம்.

வரமாக வந்த வன்தாரா

மார்ச்4: குஜராத்தின் ஜாம்நகரில் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மையத்தை (வன்தாரா) பிரதமர் மோடி திறந்து வைத்தார். பரப்பளவு 3000 ஏக்கர். 2000 விலங்குகள் உள்ளன.

'கரும்பி' சாதனை

மார்ச்23: உலகிலேயே உயரம் குறைவான (1.3 அடி) ஆடு என கின்னஸ் சாதனை படைத்தது கேரளாவில் உள்ள 'கரும்பி' ஆடு.

கோடிக்கணக்கில் பறிமுதல்

மார்ச்24: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டு எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.

குலுங்கிய மண்டாலே, பாங்காக்

மார்ச்28: மியான்மர் மண்டாலே நகரிலும், தாய்லாந்து பாங்காக் நகரிலும் ஒரே நேரத்தில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். 5456 பேர் பலி.



டாப் 4


* மார்ச்8: திருமண விருந்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை.

* மார்ச்9: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.

* மார்ச்18: காசாவில் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல். 591 பேர் பலி.

* மார்ச்30: பிரதமரான பின் முதல்முறையாக நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் சென்றார் மோடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us