/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!
/
கவிதைச்சோலை: எங்கள் தாய்மொழி தமிழ்!
PUBLISHED ON : பிப் 15, 2026

* கற்க கற்க
கற்கண்டு போல் இனிக்கும்
கல்லாதார் வயிற்றை
கனல்மூட்டி எரிக்கும்
அமுதம் மட்டுமல்ல தமிழ்
அமிலமும் ஆகும்
எங்கள் தமிழ்!
* படிக்க படிக்கப்
பாகுபோல் சுவைக்கும்
படிக்காதார் வாய்க்குப்
பாகற்காய் போல் இருக்கும்!
* வாசிக்க வாசிக்க
வாய் ஊறும்
வாசிக்கப் பழகிவிட்டால்
நாக்கு தித்திக்கும்
தமிழமுதம் பருகப் பருகப்
பஞ்சாமிர்தம் போலாகும்!
* உள்ளங்கையில் நெல்லிக்கனி
உள்ளதுபோல் கன்னித்தமிழ்
கற்பது கடினமில்லை
கற்றுத் தெரிந்துவிட்டால்
விட்டு விலக வழியில்லை!
* கேட்டால் காதில் தேன்பாயும்
கேட்காதார் காதில் சீழ்வடியும்
மாங்கனி பலா வாழை என
மூன்று கனியும் சேர்ந்த
முத்தமிழ் எங்கள்
தமிழ்மொழியாகும்!
* ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
ஆடல் பாடல் இயல் இசை
நாடகம் நாட்டியம் நடனம்
அறுபத்து நான்கு கலையும் தமிழ்!
* சிந்திக்க வைத்திடும் செந்தமிழ் பழகப்பழகப் பிடித்திடும் பைந்தமிழ்
சங்கம் வளர்த்த
செம்மொழி தமிழ்!
* தீந்தமிழ் தேன்மொழித் தமிழ் அருந்தமிழாம் அன்னைத் தமிழாம்
எங்கள் உலகத்
தாய்மொழி தமிழே!
- கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி. மொபைல்: 80988 50514

