sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை: புரிந்தால்தான் வாழ்க்கை

/

கவிதைச்சோலை: புரிந்தால்தான் வாழ்க்கை

கவிதைச்சோலை: புரிந்தால்தான் வாழ்க்கை

கவிதைச்சோலை: புரிந்தால்தான் வாழ்க்கை


PUBLISHED ON : பிப் 22, 2026

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செதுக்கினால் தான்

சிற்பம்

இல்லையெனில் எல்லாமும்

கற்கள் தான்!

விதைத்தால் தான்

பயிர்

இல்லையெனில் எல்லாமும்

வீண் தான்!

மீட்டினால் தான்

இசை

இல்லையெனில் எல்லாமும்

துருப்பிடிக்கப் போகும்

நரம்புகள் தான்!

உழைத்தால் தான்

உயர்வு

இல்லையெனில் எல்லாரும்

சோம்பேறி தான்!

படித்தால் தான்

பகுத்தறிவு

இல்லையெனில் எல்லாரும்

மூடர்கள் தான்!

ஏற்றினால் தான்

தீபம்

இல்லையெனில் எங்கேயும்

இருள் தான்!

துடித்தால் தான் இதயம்

இல்லையெனில் எல்லாரும்

மரணம் தான்!

வரைந்தால் தான்

ஓவியம்

இல்லையெனில் எல்லாமும்

கிறுக்கல்கள் தான்!

முயன்றால் தான்

வெற்றி

இல்லையெனில் எல்லாமும்

தோல்வி தான்!

தடைகள் தாண்டினால் தான்

சாதனை

இல்லையெனில் எல்லாமும்

சோதனை தான்!

புறப்பட்டால் தான்

பயணம்

இல்லையெனில் எல்லாமும்

புழுதிக் காடு தான்!

இவையெல்லாம்

புரிந்தால் தான் வாழ்க்கை

புரிந்துகொள் என் தோழா...

புலம்பி திரிவதை

மறந்து விடு என் தோழா!



- பெ.பாண்டியன், காரைக்குடி. தொடர்புக்கு : 9942847919






      Dinamalar
      Follow us