sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

கொசுக் கடியில் இருந்து பாதுகாக்கும் அபராஜித துாபம்!

/

கொசுக் கடியில் இருந்து பாதுகாக்கும் அபராஜித துாபம்!

கொசுக் கடியில் இருந்து பாதுகாக்கும் அபராஜித துாபம்!

கொசுக் கடியில் இருந்து பாதுகாக்கும் அபராஜித துாபம்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Google News

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு நாட்களுக்கு முன், மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தவர், தனக்கு அலர்ஜி - ஒவ்வாமை பிரச்னை இருப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டு களாக, அலர்ஜியை துாண்டும் விஷயங்களை கவனமாக தவிர்த்து வந்ததால், பாதிப்பு இல்லாமல் இருந்ததாகவும் சொன்னார்.

தற்போது புதிய வீட்டிற்கு மாறியதில், கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், அதற்காக கொசு திரவம் பயன்படுத்தியுள்ளார். அந்த வாசனையை தொடர்ந்து இரவில் முகர்ந்ததால், தொண்டையும், மூக்கும் சேரும் இடத்தில் எரிச்சல் வந்து, அடுத்த நாள் அடைப்பு, தும்மல், நீர் வடிவது என்று நிறைய அசவு கரியத்தை உண்டாக்கி இருந்தது.

இத்தனைக்கும் அவர் பயன்படுத்தியது, 'ஹெர்பல் மஸ்கிட்டோ ரிப்பலென்ட்' எனப்படும், மூலிகை பொருட்களால் தயாரித்த திரவம்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, மூலிகை என்ற பெயரால் தயாரிக்கப்படும் பொருட்கள், உண்மையில் ஹெர்பல் தானா என்பதை தெரிந்து உபயோகிக்க வேண்டும்.

சந்தையில் நிறைய பொருட்கள், 'கெமிக்கல் பிரீ' என்று சொல்லி விற்கப்படுகிறது. ஆனால், அதில் சேர்க்கப் பட்டிருக்கும் பொருட் களை படித்துப் பார்த்தால், ஒரு சில வேதிப் பொருட்கள் கலந்ததாக இருக்கும்.

இன்னும் சில கம்பெனிகள், பொருட்கள் தயாரிக்க சேர்க்கும் வேதிப் பொருட் களை, வெளியிட மாட்டார்கள்.

அலர்ஜி போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க வேண்டும் என்றால், பொருட்களை வாங்கும் முன், முழுமையாக அதைப்பற்றி தெரிந்து வாங்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில், அபராஜித துாபம் என்ற பொருள் உள் ளது.

ஆயுர்வேத புத்தகங்களில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பொடி.

இந்த பொடியால் துாபம் போட்ட பின், வேப்ப எண்ணெய், லெமன் கிராஸ் சேர்ந்த திரவத்தால் ஸ்பிரே செய்தால், பலன் இருக்கிறது.

டாக்டர் எம். ஹரிகிருஷ்ணன், ஆயுர்வேத மருத்துவர், சென்னை 89399 33150harihealer@gmail.com






      Dinamalar
      Follow us