sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது

/

டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது

டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது

டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது


PUBLISHED ON : நவ 23, 2025

Google News

PUBLISHED ON : நவ 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்டிபயாடிக் மருந்துகளை, டாக்டர்கள் பரிந்துரையின்றி பயன்படுத்துவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சளி, காய்ச்சல், இருமல், சிறுநீர் பாதை, தொண்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொற்று பாதிப்பால் ஏற்படும் நோய்களுக்கு, பாதிப்புகளுக்கு தகுந்தவாறு, ஆன்டிபயாடிக் மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு முறை பரிந்துரைக்கப்பட்ட மருந்தை, பல முறை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தும்போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக, இந்திய குழந்தைகள் நல டாக்டர்கள் சங்க தமிழக தலைவர் ராஜேந்திரன் கூறினார்:



அவர் கூறியதாவது:



ஆண்டுதோறும், நவ.,18 முதல் 24 வரை ஏ.எம்.ஆர்., ( ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளை அழிக்க வழங்கப்படும் மருந்து. இவற்றை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால், இம்மருந்துக்கு எதிரான எதிர்ப்பு திறனை, கிருமிகள் வளர்த்துக்கொள்கின்றன.

இதனால், நோயை குணமாக்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒரு கட்டத்தில் தற்போதுள்ள மருந்துகளுக்கு கிருமிகள் கட்டுப்படாமல் போனால் பெரும் அபாயம் ஏற்படும்.

புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்குள் பல உயிரிழப்புகள் ஏற்படலாம். ஆகவே, டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்து வாங்கக்கூடாது.

குறிப்பாக, ஆன்டிபயாடிக் ஏழு நாட்கள், இவ்வளவு அளவு என்றால் அதை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நோய் சரியாகிவிட்டது என இடையில் நிறுத்துவதும், மீண்டும் டாக்டர்கள் சீட்டு இன்றி வாங்கி உட்கொள்வதும் கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us