PUBLISHED ON : ஏப் 26, 2026

சர்க்கரை நோய்க்கும், கேன்சருக்கும் உள்ள தொடர்பை பற்றி சொல்ல விரும்புகிறேன்.
பல ஆண்டுகளாக மண்ணில் மட்கி கிடக்கும் விதைகளுக்கு எல்லாம் ஒரு மழை பெய்தால் போதும்; அப்படியே முளைக்க ஆரம்பித்து விடும்.
தகுந்த சூழ்நிலை வந்தால், மறைந்திருக்கும் விதைகள் எல்லாம் முளைப்பது போன்று, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து, கேன்சர் செல்களாக மாறிவிடுகின்றன.
ரத்தத்தில், 1 மில்லி கிராம் குளூக்கோஸ் இருந்தாலே போதும். இது எல்லா நேரத்திலும் இருக்கும். இதை எரிக்கத் தேவையான இன்சுலினை நம் கணையம் சுரக்கும்.
நாம் என்ன செய்கிறோம், பல சமயங்களில் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதை எரிக்க கூடுதல் இன்சுலின் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணையம் அயர்ச்சியாகி, தேவைக்கேற்ற இன்சுலின் சுரப் பதையே நிறுத்தி விடும்.
ரத்தத்தில் குளூக்கோஸ் அதிகரிக்கும். அதிகப்படியாக இருக்கும் குளூக்கோசை, கல்லீரல் கொழுப்பாக மாற்றி, செல்களில் சேமித்து வைக்கும். அதிகமாக கொழுப்பு சேர்ந்த செல்கள் வீங்கி இருக்கும்.
வளர்சிதை மாற்றத்தில் செல்கள் பிரியும் போது, கொழுப்பு சேர்ந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் பிரிந்து, கேன்சராக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கேன்சர் வராமல் தடுக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
இனிப்பு அதிகம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை குறைக்கவும், கொழுப்பை கரைக்கக்கூடிய மருந்துகளும் ஹோமியோ பதியில் உள்ளன.
டாக்டர் ஜாய்ஸ் திலகம், ஹோமியோபதி மருத்துவர், சென்னை. 98415 55955joicethilagam@gmail.com

