sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 12, 2026 ,மார்கழி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

இப்போதே திட்டமிட்டால்... முதுமை இனிமைதான்!

/

இப்போதே திட்டமிட்டால்... முதுமை இனிமைதான்!

இப்போதே திட்டமிட்டால்... முதுமை இனிமைதான்!

இப்போதே திட்டமிட்டால்... முதுமை இனிமைதான்!


PUBLISHED ON : ஜன 11, 2026

Google News

PUBLISHED ON : ஜன 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்க்கை எப்போதும் நாம் திட்டப்படி நடக்கும் என்று கூறமுடியாது. விபத்து, திடீர் நோய், முதுமை போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள, தயாராக இருக்கவேண்டும் என்கிறார் வழக்கறிஞர் பிரீத்தி ராகவேந்திரன். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

* முதுமையை மகிழ்ச்சியாக அனுபவிக்க, நாம் சில விஷயங்களை முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். முதலில், வங்கி கணக்குகள், காப்பீடு, நகைகள், நிலம், கடன் விவரங்கள் போன்றவை, தெளிவாக ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

* சொத்து விவகாரம் சட்ட சிக்கல்களாக மாறி பல குடும்பங்களில் உறவுகளை தொலைத்து, சொத்துக்களும் முடங்கி இருப்பதை காண்கிறோம். உயில் எழுதிவிட்டால் உடனடியாக எல்லாம் மாறிவிடும் என்று அல்ல, எப்போது அவர்கள் கைக்கு சொத்து அல்லது பொறுப்பு செல்லவேண்டும் என்பதை கூட, உயிலில் தெளிவுபடுத்த முடியும்.

* வங்கி கணக்கு மட்டுமின்றி மருத்துவ விவரங்கள், அதுசார்ந்த கோப்புகளையும் பத்திரமாக ஒரே இடத்தில் வைக்கவேண்டியது அவசியம். ஒரே டாக்டர் அல்லது மருத்துவமனையை அணுகும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அவசர சமயங்களில் நம் உடல்நிலை குறித்து அறிந்து சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும். அந்த இடம் பற்றி குறைந்தது ஒரு நம்பகமான நபருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

* அவசர பட்டியல் ஒன்றை தயார் செய்து அதில் மகன், மகள், முக்கிய உறவினர்கள், அண்டை வீட்டார், டாக்டர், போலீஸ் போன்ற எண்களை எழுதி, எளிதாக எடுக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

* முதியோர் தனியாக வசிக்கும் வீடுகளில், கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா பொருத்திக்கொள்வதும், பணியாளர்கள், டிரைவர்கள் இருப்பின் அவர்களின் முழுமையான விவரங்களை எழுதி வைப்பதும் அவசியம்.

* நகை மதிப்பு அதிகம் என்பதால் அதனால் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளது. நகைகளை வீடுகளில் வைக்காமல் இருப்பது பாதுகாப்பானது.






      Dinamalar
      Follow us