PUBLISHED ON : டிச 14, 2025

முதுமை என்றாலே உடல் சோர்வு பிரச்னை பொதுவானது. ஆனால், அதை சாதாரணமாக
கடந்து விடக்கூடாது என்கிறார், கோவை அரசு மருத்துவமனை பொது மருத்துவ பிரிவு
தலைவர் சிவக்குமார்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது..
* வயது, நோய் எதிர்ப்பு திறன் குறைதல், தேய்மானங்கள், தொற்றாநோய் போன்றவை
சாதாரண பிரச்னைகளை கூட, அசாதாரண நோய்களாக மாற்றிவிடும் என்பதால், எந்த உடல்
அறிகுறிகளையும் அலட்சியம் செய்யக்கூடாது.
* உடல் சோர்வு,
வயதாகிவிட்டால் வரும் என்ற பொதுவான கருத்து தவறானது. ரத்தசோகை, தைராய்டு
குறைதல், பிற தீவிர வியாதிகளின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புண்டு.
டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப
உறுப்பினர்களின்ஒத்துழைப்பு அவசியம்.
* நிமோனியா பாதிப்பை தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.
* ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்வது
பரிந்துரைக்கப்படுகிறது. பிரச்னைகள் இருந்தால் அப்பரிசோதனை தனி. முழு உடல்
பரிசோதனை என்பது நோய் உள்ளதா, நோய் வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து,
முன்னெச்சரிக்கையாக செயல்பட உதவும்.
* வாழ்க்கை முறையை மாற்றி உடல் இயக்கம், உணவு முறை, உடற்பயிற்சி, போன்றவற்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

