நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். மகிழ்ச்சி பெருகும்.
|* சத்திய வழியை பின்பற்றுபவர்களே பாக்கியவான்கள்.
* இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பாருங்கள்.
* இரக்கம், பொறுமை, புன்னகை, உதவி செய்தல், விட்டுக்கொடுத்தல் ஆகிய குணங்களை உடையவர்கள் உயர்ந்தவர்கள்.
* ஏழைகளை விருந்துக்கு அழைத்தால் அவர்களையும் மதிப்புடன் நடத்துங்கள்.
* எதுவும் இல்லை என வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு தேவையானது வந்தே தீரும்.
* துாய்மையும் நேர்மையும் இருப்பவர்கள் எதைக்கண்டும் பயப்பட மாட்டார்கள்.
* உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
* துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
* துக்கம் சந்தோஷமாக மாறும். சந்தோஷம் துக்கமாக மாறும்.
* நல்ல பண்புடையவர்கள் எங்கிருந்தாலும் சுகமடைவர்.
* நீங்கள் உண்மையாக இருந்தால் மற்றவரும் உண்மையாக நடப்பர்.

