sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சமாதானம்

/

சமாதானம்

சமாதானம்

சமாதானம்


ADDED : ஆக 30, 2024 10:45 AM

Google News

ADDED : ஆக 30, 2024 10:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை நிறங்களுக்குள் ஏற்பட்டது. முதலில் எழுந்த நீலம் மற்றவர்களை அலட்சியமாக பார்த்து விட்டு, ''கடலும், வானும் என் நிறத்தால் ஆனது. உலகில் உயர்ந்தவன் நானே'' என்றது.

அடுத்ததாக சிவப்பு, ''எல்லா உயிர்களின் உடம்பில் ஓடும் ரத்தம் என் நிறமே. ஆபத்து காலத்தில் அபாய எச்சரிக்கை செய்ய என்னையே பயன்படுத்துவர்''

அதைக் கேட்டு பரபரப்பு அடைந்த பச்சை நிறம், ''உலகமே என்னைத் தான் விரும்பும். வளத்தை குறிப்பவன் நானே'' என்றது.

பொறுமையுடன் நின்ற வெள்ளையோ, ''துாய்மை என்ற எண்ணமே என்னில் இருந்து வந்தது தான். மக்கள் கூடும் சபையில் எனக்கே மதிப்பு'' என்றது.

இப்படி நிறங்கள் தங்களின் பெருமைகளை அடுக்கிக் கொண்டு செல்ல இறுதியில் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. முடிவாக தீர்வு அளிக்கும்படி ஆண்டவரிடம் முறையிட்டன.

அப்போது வானில் மின்னலுடன் இடி முழங்கியது. பயந்து போன நிறங்கள் ஒன்றோடொன்று இணைந்து வானவில்லாக காட்சியளித்தன. அவர் சிரித்தபடி, ''நீங்கள் சண்டையிடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஒருவரோடு ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை அழகு பாருங்கள். எப்போதும் சமாதானமாக வாழுங்கள்'' என்றார்.

பிறரோடு இணைந்து இயங்குவது தான் பெருமை.






      Dinamalar
      Follow us