ADDED : செப் 05, 2024 04:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடத்தல்காரன் ஒருவன் படகில் போதை மருந்தை கடத்த முயன்றான். நடுக்கடலில் காவலர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல பாய்மரத்தை விரித்தான். அதன் மறைவில் நின்றபடி, அவனும், அவனது பணியாட்களும் போதை பொட்டலங்களை கடலில் துாக்கி வீசினர். படகில் ஒன்றுமில்லை எனச் சொல்லி தப்பலாம் என்பது அவனது திட்டம். எல்லாவற்றையும் வீசி விட்டு பாய் மரத்தை சுருட்டினான். அதிகாரிகள் அவனை கைது செய்தனர்.
'படகில் ஒன்றுமில்லையே! ஏன் கைது செய்கிறீர்கள்?'எனக் கேட்டான். 'ஒன்றுமில்லை என்பது உண்மை தான். ஆனால் பின்னால் திரும்பிப் பார். வீசிய போதை மருந்துகள் கடலில் மிதப்பதை'. செய்த தீவினை ஒருவனைத் தொடரும்.