sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

ஆர்வமா... கோளாறா...

/

ஆர்வமா... கோளாறா...

ஆர்வமா... கோளாறா...

ஆர்வமா... கோளாறா...


ADDED : ஜூன் 12, 2025 11:29 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோசப் என்ற மர வியாபாரிக்கு ஒரே மகன் டேனியல். படிப்பு வராததால் அவனை வியாபாரத்தில் ஈடுபடுத்தினார். அவர்களின் கடையில் சாதாரண மரக்கட்டைகளுடன் விலை உயர்ந்த சந்தன கட்டைகளும் விற்பனைக்கு இருந்தன. மகன் தொழிலுக்கு வந்த பிறகு விற்பனை அமோகமாக இருந்தது. லாபம் பெருக ஆரம்பித்தது.

இந்நிலையில் ஒருநாள் நண்பரைக் காண வெளியூருக்குச் சென்றார் வியாபாரி. அந்த நேரத்தில் விற்காமல் இருந்த சந்தனக் கட்டைகளை எல்லாம் குறைந்த விலைக்கு விற்றான் டேனியல். புத்திசாலித்தனமாகத் விற்று விட்டதாகவும் மனதிற்குள் மகிழ்ந்தான். வெளியூரில் இருந்து தந்தை வந்தார்.

முதல் வேலையாக தன்னைப் பற்றி பெருமையாகச் சொன்னான். ''முட்டாளே... சந்தன மரத்தின் வாசனை ஒருநாளும் கெடாது. நல்ல விலைக்கு போக வேண்டிய பொருளை நஷ்டத்திற்கு கொடுத்து விட்டாயே'' என திட்டினார் வியாபாரி. ஆர்வம் தேவையான ஒன்று. அதுவே ஆர்வக் கோளாறாகி விட்டால் விபரீதமாகி விடும்.






      Dinamalar
      Follow us