
நிலவில் முதலில் கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். ஆனால் முதலில் கால் வைக்க வேண்டியவர் எட்வின் சி ஆல்ட்ரின். எத்தனை பேருக்கு இது தெரியும். விண்வெளி பற்றிய அனுபவம் கொண்ட இவரை நாசா நிறுவனம் விமானியாக நிலவுக்கு அனுப்பியது. கப்பல் படையில் பணியாற்றிய நீல் ஆம்ஸ்ட்ராங்க் தைரியசாலி என்பதால் அவரும் நிலவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவரும் அங்கு சென்றதும் நிலவில் கால் பதிக்க நாசாவில் இருந்து கட்டளை வந்தது.
ஆல்ட்ரினுக்கோ தயக்கம். பூமியைப் போல் இங்கு ஈர்ப்பு விசை கிடையாது. புதை மணலால் உள்ளே இழுக்கப்பட்டால்... மணல் காலை சுட்டால்.... என தயக்கம் காட்டினார்.
அதற்குள் அடுத்த கட்டளை நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு வந்தது. துணிச்சலுடன் காலை எடுத்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
தகுதி இருந்தும் தயங்கியதால் ஆல்ட்ரினை வரலாறு மறந்தது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது உண்மை, பயப்படாதே, தயக்கம் கொள்ளாதே என்கிறது பைபிள்.