ADDED : ஜூன் 27, 2024 12:32 PM
அ நிறம் | அளவு
ஒரு இளம் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பலர் சமாதானம் செய்தும் பிரச்னை தீரவில்லை.
கடைசியாக பாதிரியாரிடம் கொண்டு சென்றனர். அவரிடம், ''வீடு, கார், ஆடை, ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்தேன். ஆனாலும் என்னுடன் தினமும் சண்டை செய்கிறாள்'' என வருத்தப்பட்டான் கணவன்.
''இவர் சொல்வது உண்மை. இவருடன் குடிசையில் வாழத் தயார். இவர் கொடுத்த பொருள் எனக்கு வேண்டாம். மது, மாது,
சூது என அலைகிறார். அன்பு ஒன்றே போதும்.'' என்றாள் மனைவி.
குடும்பம் நடத்த பணம் மட்டும் போதாது. அன்பும், பாசமும் அவசியம் என்றார் பாதிரியார்.
