sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

யார் வீட்டுக்கு போறீங்க? படிச்சுட்டு கிளம்புங்க!

/

யார் வீட்டுக்கு போறீங்க? படிச்சுட்டு கிளம்புங்க!

யார் வீட்டுக்கு போறீங்க? படிச்சுட்டு கிளம்புங்க!

யார் வீட்டுக்கு போறீங்க? படிச்சுட்டு கிளம்புங்க!


ADDED : மே 27, 2013 02:36 PM

Google News

ADDED : மே 27, 2013 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பர்களோ, உறவினர்களோ...யாராக இருந்தாலும், அவர்களது வீட்டுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஒரு வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்பட்டு விடும்.

ஒரு நண்பரின் இல்லத்தை தேடி ஒரு தம்பதியர் வந்தனர். நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். தாங்களும் அந்த ஊருக்கே மாற்றலாகி வந்து விட்டதாகவும், தாங்கள் வாடகை வீட்டுக்காக அலைந்த கதை, குழந்தைகளை நல்ல பள்ளி களில் சேர்க்க பட்டபாடு, குடிதண்ணீருக்கு தெருத்தெருவாக குடங்களுடன் அலைந்த கதை என மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்.

குறிப்பிட்ட நேரம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர், அவர்களின் அறுவைக்கச்சேரி தொடரவே சலிப்புக்குள்ளானார்.

ஒரு கட்டத்தில் வெறுப்புடன், ''சரி...எனக்கு தூக்கம் வந்து விட்டது. நீங்கள் கிளம்புகிறீர்களா?'' என்று கேட்டுவிட்டார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி போகவும் கூடாது. அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவும் கூடாது.

''உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே'' என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. உறவு, நண்பர்களின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வது ஒரு கட்டத்தில் அவமானத்திற்கு ஆளாக்கிவிடும்.






      Dinamalar
      Follow us