sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

கண்களின் கடமை

/

கண்களின் கடமை

கண்களின் கடமை

கண்களின் கடமை


ADDED : ஜன 29, 2018 09:23 AM

Google News

ADDED : ஜன 29, 2018 09:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயேசுவிடம் நீங்கள் ஜெபிக்கும் போது, நமது கண்கள் சுத்தமான பார்வை பார்க்க வேண்டும் எனக்கூற வேண்டும். இதோ அந்த ஜெப வரிகள்.

* என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்தருளும் ஆண்டவரே!

* மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இராதபடி காத்துக்கொள்ளும் ஆண்டவரே!

* இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்துக் கொள்ளும்.

* ஆண்டவரே! என் கண்களை ஏழைகளிடம்இருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ கிருபை செய்யும்.

* விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்களையுடையவர்கள் போல் என் கண்கள் இருக்க கூடாது.

* என் கண் கெட்டதாயிருந்து, சரீரம் இருளடையாதபடி காத்து கொள்ளும்.

* செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனை போல நான் ஆகி விடக்கூடாது.

* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்து கொள்ளும்.

* பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது என்றெண்ணி செயல்பட்டு, சாபத்தை நான் வாங்குகிறவனாய் இராதபடி காத்து கொள்ளும்.

* என் கண்கள் உமது வழியை காணும்படி உதவி செய்யும். என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.

இப்படி ஜெபம் செய்தால், நம் கண்கள் தீயவற்றைக் காண்பதிலிருந்து விலக ஆண்டவர் அருள் செய்வார்.






      Dinamalar
      Follow us