ADDED : பிப் 02, 2016 11:48 AM

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் என பைபிள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.
* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.
* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.
* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.
* செல்வத்தை குவிக்கிறான் யார் வாரிசு என்று தெரியாமலேயே.
* எரிக்கும் உஷ்ணத் துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.
* பூலோகத்தில் உங்களுக்காக பொக்கிஷங்களை சேர்க்க வேண்டாம். அதை அந்தும் தூரும் அரிக்கும். திருடர்களும் கன்னமிட்டு திருடுகிறார்கள்.
பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை போக மிஞ்சியதை தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு மரியாதை கிடைக்கும்.