ADDED : ஜன 12, 2024 04:46 PM
அ நிறம் | அளவு
பணப்பையுடன் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பணப்பை நழுவுவதைக் உணர்ந்த அவர் ' என்பணப்பையை பிடியுங்கள்' என கத்தினார். கரையில் இருந்த ஒருவர் ஆற்றில் குதித்து பணப்பையை எடுத்துக் கொண்டு கரை சேர்ந்தார். அதற்குள் வெள்ளத்தில் சிக்கியவரை கரையில் இருந்தவர்கள் காப்பாற்றினர். ஆபத்து காலத்தில் முதலில் எதை சொல்ல வேண்டுமோ, அதை சொல்லாமல் இவரை போல் பலர் வாழ்கின்றனர்.
உடமையை விட உயிர் முக்கியம்.
