நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்பிற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர் ஒரு தம்பதியர். ஒரு சமயம் கணவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.
மனைவியிடம், அன்பே நான் வெளியூர் செல்கிறேன். என் நினைப்பு வரும் போதெல்லாம் என் படத்தை பார்த்துக் கொள் என்றார். அதற்கு அவளோ நீங்களும் இந்தப் படமும் ஒன்று தானே எனக் கேட்டாள். ஆமாம் என்றார். அதை கேட்ட அவள் உங்களுக்கு பதில் இந்த படத்தை வெளியூருக்கு அனுப்புங்கள் என்றாள்.
அன்பு சில நேரங்களில் முட்டாள் தனமாக செயல்படும்.