sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நம்பிக்கை வேண்டும்

/

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்


ADDED : நவ 13, 2013 02:38 PM

Google News

ADDED : நவ 13, 2013 02:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்ரவேல் மக்கள் ஏதோம் நாட்டைச் சுற்றிப்பார்க்க இறைவன் உத்தரவுப்படி புறப்பட்டனர்.

அந்நாடு வனாந்திரமாக காட்சியளித்தது. ''காடுபோன்ற இந்த நாட்டில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. இதைப் பார்க்கத்தான் ஆண்டவர் எங்களை வரச் சொன்னாரா?'' என்று பேசினர். தங்களை இக்காட்டிற்கு வரவழைத்த தேவனை நிந்தித்தனர்.

அப்போது, கர்த்தர் அவர்களைச் சோதிக்கும் விதமாக சிலகொள்ளிவாய் பாம்புகளை அனுப்பினார். அவை மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கடித்தன. சிலர் இறந்தனர். மக்கள் ஒன்றுகூடி அரண்மனை வாழ்வு வாழ்ந்து பின்பு தன்னை இறைப்பணியில்

ஈடுபடுத்திக் கொண்ட மோசே என்பவரிடம் சென்றனர்.

''நாங்கள் கடவுளுக்கு விரோதமாக பேசினோம். இப்போது கஷ்டப்படுகிறோம். இந்த பாம்புகள் எங்களை விட்டு போகும்படியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,'' என்றனர்.

மோசேயும் அவர்களுக்காக பிரார்த்தித்தார். அப்போது கடவுள், ''நீ ஒரு வெண்கலப்பாம்பை செய்து, ஒரு கம்பத்தில் கட்டி வை. அது இறந்து கிடப்பவர்களின் பார்வை இருக்கும் திசை நோக்கி இருக்கட்டும்,'' என்றார். மோசேயும் இறைவன் கட்டளைப்படியே செய்தார்.இறந்து கிடந்தவர்கள் உயிரோடு எழுந்தனர்.

மக்களோ, இறைவன் தந்த சிறுசோதனையைக் கூட தாங்காமல் அவரை நிந்தித்தனர். மோசேயோ, இறந்தவர்களையும் எழுப்பலாம் என்ற நம்பிக்கையில் ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார். இப்போது சொல்லுங்கள். ஆண்டவர் மீதான நம்பிக்கை உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது சரியான ஒன்றுதானே!






      Dinamalar
      Follow us