sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

ஆண்டவரின் மனதில் நிலைக்க வேண்டுமா?

/

ஆண்டவரின் மனதில் நிலைக்க வேண்டுமா?

ஆண்டவரின் மனதில் நிலைக்க வேண்டுமா?

ஆண்டவரின் மனதில் நிலைக்க வேண்டுமா?


ADDED : பிப் 16, 2016 10:21 AM

Google News

ADDED : பிப் 16, 2016 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க பேராசிரியரான ஹியூஜ் மூர்ஹெட் என்பவர், உலகத்தின் தலை சிறந்த அறிவாளிகள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து, 'வாழ்வின் அர்த்தம் என்ன?' என்று ஒரு கேள்வி கேட்டார். அந்த அறிவு ஜீவிகள் ஆளுக்கொரு கருத்தைக் கூறினர். அவற்றைத் தொகுத்து அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார்.

வாழ்வைப் பற்றி அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகங்களாகவும், தற்பெருமை கொண்டதாகவுமே அமைந்திருந்தன. ஒருவர் கூட கடவுளின் சித்தப்படியே நமது வாழ்வு அமைந்திருக்கிறது என சொல்லவில்லை. மூர்ஹெட் வாழ்வைப் பற்றி எழுதும் போது, 'படைப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம்' என்று சொல்லியிருந்தார்.

''நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்,'' என்று இயேசு சொன்னது பைபிளில் இருக்கிறது.

ஆம்...ஆண்டவரால் மட்டுமே நம்மை வழி நடத்த முடியும். 'நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே வாழ்க்கை.. இதன் அர்த்தம் என்ன?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், 'அது ஆண்டவனின் சித்தத்தைப் பொறுத்தது, அவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்' என பதில் சொல்லுங்கள். அந்த பதில் ஆண்டவரின் மனதில் உங்களை நிலைக்க வைக்கும்.






      Dinamalar
      Follow us