sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நல்ல போதனை நமக்கு தேவை

/

நல்ல போதனை நமக்கு தேவை

நல்ல போதனை நமக்கு தேவை

நல்ல போதனை நமக்கு தேவை


ADDED : பிப் 02, 2016 11:49 AM

Google News

ADDED : பிப் 02, 2016 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ஆட்டுக்கிடைக்குள் அதன் வாசல் வழியாய் வராமல், வேறுவழியாய் வருகிறவனை திருடன் என்று புரிந்து கொள்ளும் ஆடுகள் சத்தம் போட்டு தன்னை மேய்ப்பவனை உஷார்படுத்துகின்றன. வாசல் வழியாய் வருகிறவனை தங்கள் மேய்ப்பன் என நம்பி அவன் பின்னால்

செல்கின்றன. இது போலவே மக்களின் மேய்ப்பராக இயேசு கிறிஸ்து உள்ளார். அவர் நம்மை வழி நடத்துகிறார்.

பைபிளில் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

'நானே வாசல். என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் ரட்சிக்கப்படுவான். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன்

ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனல்லாதவனும், ஆடுகளுக்கு சொந்தக்காரனும் அல்லாத கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப் போகிறான்.

அப்பொழுது ஓநாய் பீறி (விரட்டி) அவைகளைச் சிதறடிக்கும். இந்த தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல், வேறு ஆடுகளும் எனக்குண்டு. அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். என் ஆடுகள் (மக்கள்) என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது,'' என்கிறார்.

இதன் மூலம் தனது போதனைகளை கடைபிடிக்கவும், கடவுளிடம் விசுவாசமாக இருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும்,

நல்லதை செய்யவும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்.






      Dinamalar
      Follow us