ADDED : செப் 23, 2024 09:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையன்று சுற்றுதல்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் தீபம் ஏற்றுதல்
* சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்த பிரபுவை வழிபடுதல்.
* விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீஸா படித்தல்
* சனிப்பிரதோஷ நாளில் சிவனுக்கு வில்வத்தால் பூஜித்தல்
* நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தல்.
* சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல்
* சனீஸ்வரருக்கு எள்சாதம் நைவேத்யம் செய்து காகத்திற்கு படைத்தல்
* நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டிகளை தானம் செய்தல்
* பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தல்
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்