
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகா திருக்கோகர்ணம்.
* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.
* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு.
* ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி.
* ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.
* சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.
* பஞ்சாட்சர மந்திரத்தை 'திருவைந்தெழுத்து' என்றும் சொல்வர்.