
எம்.சங்கரி, மயூர்விஹார், டில்லி.
*விநாயகரை எந்த நாளில் வழிபடலாம்?
சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபட சங்கடம் தீரும். மேலும் செவ்வாய், வெள்ளி ஏற்றவை.
வி.தருண், திருத்தணி, திருவள்ளூர்.
*சித்தி, புத்தி என்பவர் யார்?
வெற்றி, புத்தியை தருபவர் விநாயகர். இதை உணர்த்தும் விதத்தில் சித்தி, புத்தியுடன்(மனைவிகள்) இருக்கிறார்.
எஸ்.வினோதா, ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி.
*விநாயகரின் நட்சத்திரம், ராசி எது?
அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி
கே.சிந்துஜா, கனகபுரா, பெங்களூரு.
*எலியின் மீது விநாயகர் இருப்பது ஏன்?
கஜமுக அசுரனை தந்தத்தால் குத்த எலி வடிவில் சரணடைந்தான். அவனை வாகனமாக ஏற்றார் விநாயகர்.
ஆர்.வைதேகி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
*அர்ச்சனை செய்ய அருகம்புல்லிற்கு இணையான பூக்கள் எவை?
வெள்ளெருக்கு, தும்பை, வில்வம்
பி.ஹேமந்த், சிவகாசி, விருதுநகர்.
*கனவில் வீட்டுக்கு யானை வந்தால்...
உங்கள் வழிபாட்டை விநாயகர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.
ஆர்.கணபதி, பல்லடம், திருப்பூர்.
*விநாயகர் சதுர்த்தியை தேசிய அளவில் கொண்டாடியவர் யார்?
தேச ஒற்றுமைக்காக விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் கொண்டாடினார்.
எம்.அர்ச்சனா, நிலக்கோட்டை, திண்டுக்கல்.
*யானைச் சாணம் திருஷ்டியை போக்குமா…
யானையின் சாணம் செய்வினை கோளாறையும், அதன் காலடி பட்ட மண் திருஷ்டியையும் போக்கும்.
எல்.கணேஷ், கருவடிபாளையம், புதுச்சேரி.
*பிள்ளையார்சுழி இடுவது ஏன்?
ஓம் என்னும் மந்திரமே விநாயகர். அதனால் பிள்ளையார்சுழி இடுகிறோம்.
ஜி.மயூரா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.
*விநாயகருக்குப் பிடித்த ராகம், தாளம் எது?
ராகம் - ஹம்ஸத்வனி, கம்பீரநாட்டை
தாளம் - ஆதி, சச்சபுடம்