
எம்.மைதிலி, ஆர்.கே.புரம், டில்லி.
*சாப்பிட்டதும் தட்டில் கை கழுவலாமா?
சாப்பிடும் தட்டு புனிதமானது என்பதால் அதில் கை கழுவக்கூடாது.
எம்.அனிதா, நத்தம், திண்டுக்கல்.
*சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?
பூஜையின் போது பதினாறு உபசாரம் (ஷோடச உபசாரம்) செய்ய வேண்டும். அதில் ஒன்று கண்ணாடி காட்டுதல்.
ஆர்.சீதா, வில்லியனுார், புதுச்சேரி.
*தரையில் விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?
பவழமல்லி தவிர மற்ற பூக்களை பயன்படுத்தக் கூடாது.
வி.ரமேஷ், ஆயக்குடி, தென்காசி.
*கோயில் கொடிமரத்தில் உப்பு, மிளகு கொட்டுவது ஏன்?
தோல் நோய், கொப்பளம் மறைய நேர்த்திக்கடனாக இதைச் செய்வர்.
எஸ்.வினித், ஜெயந்தி நகர், பெங்களூரு.
*ஒற்றுமையுடன் வாழ ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்.
மாதாச பார்வதீதேவி
பிதாதேவோ மகேஸ்வர
பாந்தவா: சிவபக்தாஸ்ச
ஸ்வதேசோ புவனத்ரயம்||
நம் தாய் பார்வதி, தந்தை சிவன், பக்தர்கள் நம் சகோதரர்கள், மூவுலகும் நம் சொந்த ஊர். இதை தினமும் சொல்லி வழிபடுங்கள்.
ஆர்.பிரபு, சிவகாசி, விருதுநகர்.
*கடவுளுக்கு நைவேத்யம் செய்வது ஏன்?
நைவேத்யம் என்றால் 'தெரிவிப்பது' என பொருள். இதன் மூலம் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்.
எம்.விக்னேஷ், பல்லடம், திருப்பூர்.
*விழாக்களில் மங்கள இசை தவிர மற்றவை இசைக்கலாமா?
மங்கள இசை தவிர பக்தி பாடல்களை மட்டும் ஒலி பரப்பலாம்.
கே.மணி, எழும்பூர், சென்னை.
*பசுவதை செய்யலாமா?
கூடாது. அப்படி செய்தால் 21 தலைமுறைக்கும் அந்த பாவம் தொடரும்.
ஆர்.பார்த்திபன், தோவாளை, கன்னியாகுமரி.
*கல்யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் எங்குள்ளார்?
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது.