sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 27, 2024 09:04 AM

Google News

ADDED : செப் 27, 2024 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.லாவண்யா, கல்யாண்புரி, டில்லி.

*நவராத்திரி என்றால்...

ஒன்பது இரவுகள். இந்நாளில் அம்மனை வழிபடுவர்.

வி.அருணா, தாம்பரம், செங்கல்பட்டு.

*நவராத்திரி பற்றி சொல்லும் புராணங்கள்...

மார்க்கண்டேய புராணம், தேவி பாகவதம்

டி.ஜோதிமணி, அவினாசி, திருப்பூர்.

*அமாவாசை அன்று கொலு பொம்மைகளை அடுக்கலாமா...

அமாவாசையன்று பொம்மைகளை அடுக்கி வையுங்கள். மறுநாளான பிரதமையில் இருந்து விஜயதசமி வரை கொண்டாடுங்கள்.

பி.பிரணவ், கன்னிவாடி, திண்டுக்கல்.

*கொலு வைப்பதன் நோக்கம்...

அம்பிகையை தினமும் ஒவ்வொரு வடிவமாக அலங்கரித்து வழிபடுவதே இதன் நோக்கம்.

ஆர்.ஆனந்தி, பூவரசன்குப்பம், விழுப்புரம்.

*நவராத்திரி எத்தனை நாள் கொண்டாடப்படுகிறது?

கர்நாடகாவில் தசரா என்னும் பெயரில் பத்து நாளும், மற்ற இடங்களில் ஒன்பது நாளும் கொண்டாடப்படுகிறது.

எம்.மிதுஷன், ராஜபாளையம், விருதுநகர்.

*ஆயுதபூஜையின் நோக்கம் என்ன

ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தொழில் கருவிகளுக்கு, நன்றி செலுத்தும் நாள்.

எல்.மாதவன், தச்சநல்லுார், திருநெல்வேலி.

*நவராத்திரியில் உடைகளை தானம் செய்யலாமா...

ஒன்பது நாளும் கொடுத்தால் நல்லது. சரஸ்வதி பூஜையன்று கட்டாயம் கொடுங்கள்.

கே.வைதேகி, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*சாரதா நவராத்திரி என்றால்...

குளிர்காலத்தில் (சரத்ருது) கொண்டாடப்படுவதால் சாரதா நவராத்திரி என்கிறோம்.

ஆர்.ரம்யா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

*நவராத்திரியில் பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

வீட்டை துாய்மை செய்தல், அம்மனுக்காக விரதம் இருத்தல், கொலு அலங்காரம் செய்தல், உறவினரை உபசரித்தல், ஆடல், பாடல் என கொண்டாடுதல், உயிர்களை நேசித்தல்

எஸ்.கார்த்திக், மாகடி, பெங்களூரு.

*கோயில்களில் எவ்வளவு காலமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது?

கோயில் உருவான காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us