
ப.ராதா, வாசுதேவநல்லுார், தென்காசி.
*மன்னிக்கும் மனம் யாருக்கு வரும்?
தவறுக்கு காரணம் ஒருவரின் அறியாமை. இதை உணர்ந்தால் மன்னிக்கும் மனம் வரும்.
அ.காசி ராஜன், ஊட்டி, நீலகிரி.
*நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறுாட்டலாமா?
நிலவைக் காட்டி ஊட்டினால் பிடிக்காத உணவைக் கூட குழந்தை மகிழ்ச்சியாக உண்ணும்.
வி.ராகவி, காரைக்குடி, சிவகங்கை.
*பரத கண்டம் என்றால் என்ன?
இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த மன்னர் பரதன். இவர் சகுந்தலை, துஷ்யந்தன் தம்பதியின் மகன். இவரது பெயரால் நம் நாட்டை பரத கண்டம் எனவும் அழைக்கிறோம்.
வே.சிவராமன், பசவன்குடி, பெங்களூரு.
*பணம் பன்மடங்கு பெருக...
திட்டமிட்டு உழை. கடவுளை நம்பி செயல்படு.
எல்.ஆதிரா, திப்பிரமலை, கன்னியாகுமரி.
*விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்கிறார்களே...
விட்டுக் கொடுக்காதவன் விடாக்கண்டன். கொடுக்க மனமில்லாதவன் கொடாக்கண்டன்.
பி.வசந்த், அனுமந்தை, விழுப்புரம்.
*கூர்ம அவதாரக் கோயில் எங்குள்ளது?
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று கூர்மம் (ஆமை). ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் பலமனேர் அருகிலுள்ள கூர்மம் என்னும் கிராமத்தில் உள்ளது.
டி.உமேஷ், நிலக்கோட்டை, திண்டுக்கல்.
*நம்பினார் கெடுவதில்லை என்பது ஏன்
நம்பியவரை கடவுள் காப்பாற்றுகிறார் என்பதை வேதம் சொல்கிறது. இதை மகாகவி பாரதியார் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பிரீத்தி, கல்யாண்புரி, டில்லி.
*பகவானே... பகவதியே... என அழைப்பது ஏன்?
பக' என்றால் பாக்கியம்(நலம்). அதனை தருவதால் சுவாமியை பகவான் என்றும், அம்பிகையை பகவதி என்றும் அழைக்கிறோம்.
கே.ராகவன், கோடம்பாக்கம், சென்னை.
*ருத்ராபிஷேகம் என்றால் என்ன?
வேதத்தில் உள்ளது ஸ்ரீருத்ர மந்திரம். இதை 11முறை ஜபித்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.