sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 17, 2024 08:55 AM

Google News

ADDED : அக் 17, 2024 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.சிம்மா, பூவசரங்குப்பம், விழுப்புரம்.

*வாழ்க்கையை தீர்மானிப்பது யார்?

முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியத்தின் படி வாழ்க்கை அமையும். அதை தெய்வத்தின் கட்டளைப்படி கொடுப்பது நவக்கிரகம்.

ரா.விவேகானந்தன், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி.

*எழுதும் போது 'உ' என தொடங்குவது ஏன்?

பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதன் சுருக்கம் 'உ'. மங்கலத்தின் அடையாளமாக இதை எழுதுகிறோம்.

சி.கவிதா, வீரபாண்டி, தேனி.

*கருட புராணம் எதைப் பற்றி சொல்கிறது?

இறந்த பின் உயிரின் நிலை, பாவம் செய்த உயிர்களின் கஷ்டங்கள், இறந்தவருக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை விளக்குகிறது. இதை துக்க வீட்டில் படிப்பர்.

டி.வைஷ்ணவி, நங்கநல்லுார், சென்னை.

*கர்மா எத்தனை?

1. முற்பிறவிகளில் செய்தது சஞ்சிதம்.

2. இப்பிறவியில் நம்முடன் வந்தது பிராப்தம்.

3. நாம் செய்து கொண்டு இருப்பது ஆகாமியம்.

சி.கார்த்திகா, கல்யாண்புரி, டில்லி.

*சுவாமிக்கு கதர்துணி சாத்தலாமா?

சாத்தலாம். இதை கார்ப்பாச வஸ்திரம் என்கிறோம்.

எம்.பவி, சிவாஜி நகர், பெங்களூரு.

*கமலா சப்தமியன்று யாரை வழிபடலாம்?

கமலா சப்தமி என்பது பங்குனி வளர்பிறை சப்தமியாகும். அன்று சூரியன், மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். கண்நோய் தீரும்.

வி.குமார், பசுமலை, மதுரை.

*குருதோஷம் தீர...

வியாழக்கிழமையன்று விரதம் இருங்கள். மாலையில் தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலையோ அல்லது குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலையோ சாத்துங்கள்.

பி.அழகேசன், தச்சநல்லுார், திருநெல்வேலி.

*சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்யலாம்?

சிறிதளவு நீர்நிலையில் கரைத்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம்.

மு.வெண்ணிலா, அலகுமலை, திருப்பூர்.

*வீட்டில் பூஜை செய்ய பழத்தை மட்டும் நைவேத்யம் செய்யலாமா?

படங்களாக இருந்தால் பழங்களையும், சிலையாக இருந்தால் அன்னத்தையும் சேர்த்து நைவேத்யம் செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us