
ஆ.சிவா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: வீட்டில் ஒருவர் துாங்கும் போது, விளக்கேற்றலாமா?
விளக்கேற்றும் நேரத்தில் துாங்கக் கூடாது.
கு.பரசுராம், திருமங்கலம், மதுரை: தினசரி எத்தனை மணி நேரம் ஜபம் செய்யலாம்?
நேரம் கிடைக்கும் போதெல்லாம்...
பி.ராஜாராம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: எந்த நேரத்தில் எந்த ஸ்தோத்திரம் சொல்லலாம்?
காலை - விநாயகர், சிவன், சூரியன்.
மதியம் - விஷ்ணு
மாலை - முருகன், மகாலட்சுமி, அம்மன்.
யா.அருள், எல்.ஆர்.பாளையம், புதுச்சேரி: துளசி மாலையில் வெள்ளிப்பூண் சேர்க்கலாமா?
சக்தி பெருக இதை சேர்க்கலாம்.
போ.மகேஷ், பழநி, திண்டுக்கல்: மாலையில் அரச மரத்தை சுற்றலாமா...
சூரியன் மறைவதற்குள் சுற்றுங்கள்.
தி.போஸ், குளச்சல், கன்னியாகுமரி: இனிப்பு, உப்பு இதில் முதலில் எதை பரிமாற வேண்டும்?
இனிப்பு பரிமாறுவது சிறந்தது.
வி.அமராவதி, மருதமலை, கோயம்புத்துார்: விளக்கேற்றும் போது பின்வாசலை சாத்துவது ஏன்?
வீட்டில் விளக்கேற்றியதும் மகாலட்சுமி அங்கு வருகிறாள். அவளின் அருள் மேலும் பெருக பின்வாசலை சாத்துகிறோம்.
மு.ராதிகா, எழும்பூர், சென்னை: துளசி கலந்த நீரை காய்ச்சி குடிக்கலாமா?
குடிக்கலாம். உடல்நலத்துடன் புண்ணியமும் கிடைக்கும்.
எம்.ரம்யா, கல்யாண்புரி, டில்லி: துறவிகளின் சன்னதிக்கு எப்படி செல்ல வேண்டும்?
துறவி, குருநாதர், குழந்தையை பார்க்க பூ, பழத்துடன் செல்ல வேண்டும்.