
தா.சிவசித், இந்தர்புரி, டில்லி: கண் பிரச்னை தீர...
'ஆலம் தானுகந்து அமுது செய்தானை...' எனத் தொடங்கும் பதிகத்தை தினமும் படியுங்கள்.
பா.குமார், தேவகோட்டை, சிவகங்கை: *திருநீறு பூசும் போது என்ன மந்திரம் சொல்லலாம்?
'ஓம் நமசிவாய' எனச் சொல்லுங்கள்.
ஆ.காந்திமதி, சேர்ந்தமரம், தென்காசி: *கடைசியாக விநாயகரை வழிபட்டால் தவறா...
தவறில்லை. கடைசியாக கொடிமரத்திலுள்ள விநாயகரை வணங்குங்கள்.
ரா.மகதி, நெலமங்கலா, பெங்களூரு: *கோபூஜை செய்ய வாய்ப்பு இல்லை. என்ன செய்ய?
வெள்ளியன்று பசுவுக்கு அகத்திக்கீரை, அருகம்புல், வாழைப்பழம் கொடுங்கள்.
எம்.யாழினி, வண்டலுார், காஞ்சிபுரம்: *யாருக்கு சஷ்டியப்த பூர்த்தி (மணி விழா) நடத்தலாம்?
60 வயது பூர்த்தியானவர்கள் நடத்தலாம்.
வ.பரமு, கம்பம், தேனி: *பருவ வயதில் உள்ள என் பேத்திக்கு மொட்டை நேர்ச்சை உள்ளது. என்ன செய்ய?
கூந்தல் நுனியில் பூ முடித்து அதை கத்தரித்து செலுத்தலாம்.
வீ.மணி, குடிமங்கலம், திருப்பூர்: *நேர்த்திக்கடனை எவ்வளவு நாளில் செலுத்தலாம்?
அவரவர் வசதிக்கேற்ப செலுத்தலாம்.
நா.பிரஹதி, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: *கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாதா...
கர்ப்பிணிகள் வரக் கூடாது.
கி.தருமர், நாகர்கோவில், கன்னியாகுமரி: *கிரகணத்தின் போது தர்ப்பணம் செய்யலாமா...
தர்ப்பணம் செய்யலாம்.

