
கு.தீபா, அருப்புக்கோட்டை, விருதுநகர்: கர்ப்பிணிகள் எத்தனை மாதம் வரை கோயிலுக்கு செல்லலாம்?
குழந்தை பிறக்கும் வரை தீட்டு உண்டாகாது. அதுவரை கோயிலுக்கு செல்லலாம்.
எம்.ராமநாதன், மதுராந்தகம், செங்கல்பட்டு: ஆடியில் குழந்தை பிறந்தால்…..
தவறில்லை. எல்லா குழந்தைகளையும் போல நலமுடன் இருப்பார்கள்.
ஏ.ராதிகா, சின்னசேலம், கள்ளக்குறிச்சி: இரவில் கோயில் குளத்தில் நீராடக் கூடாதா...
கூடாது. ஆனால் கிரகணத்தின் போது நீராடலாம்.
யா.கோகிலா, சுரண்டை, தென்காசி: குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன ஹோமம் செய்யலாம்?
சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி ஹோமம், திருவோணத்தன்று சுதர்சன, லட்சுமி ஹோமம் நடத்துங்கள்.
ந.அக் ஷயா, அருவங்காடு, நீலகிரி: சுவாமி கும்பிடும் போது கைகள் எப்படி இருக்க வேண்டும்?
இரு கைகளையும் மார்புக்கு நேராக சேர்த்தபடி இருக்க வேண்டும்.
தி.வரதராஜன், வத்தலக்குண்டு, திண்டுக்கல்: நவக்கிரகத்தை எந்த கிழமையில் வழிபட வேண்டும்?
சனிக்கிழமை.
வி.ராகவன், வில்லுக்குறி, கன்னியாகுமரி: ஹிமாசல பிரதேஷ் அம்மனான ஜ்வாலாமுகியை வழிபட்டால்...
திருஷ்டி, தீவினை, தடங்கல், கிரக தோஷம் நீங்கும்.
எஸ்.ரம்யா, கால்காஜி, டில்லி: திரிசங்கு சொர்க்கம் என்றால்...
உடலோடு சொர்க்கம் செல்ல விரும்பியவர் மன்னர் திரிசங்கு. அவருக்காக விஸ்வாமித்திரர் இதை படைத்தார்.
ரா.மதுசூதனன், திருநள்ளார், புதுச்சேரி: என் முயற்சியில் தடங்கல் ஏற்படுகிறதே...
முன்னோர் சாபமாக இருக்கலாம். அவர்களின் ஆசி கிடைக்க ராமேஸ்வரத்தில் திலஹோமம் நடத்துங்கள்.