sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 31, 2025 03:01 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஸ்ரீப்ரியா, திருநகர், மதுரை: *விருப்பம் நிறைவேற திருவிழா நாளில்தான் கோயிலுக்கு செல்ல வேண்டுமா...

இல்லை. செவ்வாய், வெள்ளி, பவுர்ணமியில் செல்லலாம்.

கே.ஸ்ரீதிவ்யா, மேல்மலையனுார், விழுப்புரம்: *சில கோயில்களில் மூலவருக்கு அபிேஷகம் செய்வதில்லையே...

சுயம்பு, புற்று, சுதை, குடைவரை கோயில்களில் அபிேஷகம் செய்வதில்லை.

ஆர்.ஸ்ரீவித்யா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: *பஞ்ச தீபத்தை தரிசித்தால்...

கோயிலில் சுவாமிக்கு பூஜையின் போது பஞ்சதீபம் காட்டுவர். இதை தரிசிக்க பாவம் தீரும்.

டி.ஸ்ரீலட்சுமி, பல்லடம், திருப்பூர்: *காய்ச்சலுக்கு என்ன மந்திரம் சொல்லலாம்?

விஷ்ணு சகஸ்ர நாமம், நாராயணீயம் ஸ்லோகத்தை காலை, மாலையில் கேளுங்கள்.

ஆர்.ஸ்ரீநயா, செங்கோட்டை, தென்காசி: *மாமியார், மருமகள் சண்டை அடிக்கடி வருகிறதே... ஏன்?

விட்டுக் கொடுங்கள் அல்லது விலகி இருங்கள்.

வி. ஸ்ரீதன்யா, வத்தலக்குண்டு, திண்டுக்கல்: *கிணற்றை மூடி விட்டு, அதன் மீது வீடு கட்டுகிறார்களே...

மூடிய இடத்தை தவிர, மற்ற இடத்தில் வீடு கட்டலாம்.

பி.ஸ்ரீஜா, சரோஜினிநகர், புதுடில்லி: சரணாகதி என்றால்...

சரணம் - தஞ்சம்.

ஆகதி - அடைதல். கடவுளிடம் தஞ்சம் அடைவது எனப் பொருள்.

எல்.ஸ்ரீஷா, ஊட்டி, நீலகிரி: *அருவுருவ வழிபாடு என்றால் என்ன?

உருவமும், அருவமும் கலந்தது அருவுருவம்.

உ.ம்.: சிவலிங்கம்

பி.ஸ்ரீதா, திருப்போரூர், செங்கல்பட்டு: *எல்லா உயிர்களுக்கும் நவக்கிரகத்தின் தாக்கம் உண்டா?

எல்லா உயிர்களுக்கும் பாவ, புண்ணியம் உண்டு. அதை தருவது நவக்கிரகம்.






      Dinamalar
      Follow us