
ஆர்.செந்தில்குமார், கல்யாண்புரி, டில்லி: விரைவில் கடன் தீர ஏற்ற நாள்...
செவ்வாய் அன்று கடனை அடைக்க தொடங்குங்கள்.
கே.சக்கரபாணி, ஆர்.ஏ.புரம், சென்னை: புத்தகத்தின் மீது மஞ்சள் பூசலாமா...
வீட்டு பூஜையின் போது புத்தகத்தின் மீது மஞ்சள் பூசலாம்.
பி.துரைராஜ், நெய்வேலி, கடலுார்: மறைந்த தாயாரின் பிரார்த்தனையை மகள் நிறைவேற்றலாமா?
குடும்பத்தை சேர்ந்த யாரும் நிறைவேற்றலாம்.
பா.சங்கரன், சிங்கநல்லுார், கோயம்புத்துார்: பெருமாளின் ஆயுதம் என்னென்ன?
சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வில் (சாரங்கம்), வாள் (கட்கம்)
நா.லட்சுமி, வாழவல்லான், துாத்துக்குடி: பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடக்குமா...
மாதம் தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நடக்கும்.
கு.இளங்கோவன், பழநி, திண்டுக்கல்: கும்பாபிஷேகத்தில் என் மீது புனிதநீர் படாதது குறையா...
புனிதநீர் தெளிப்பது முன்பு இல்லை. கும்பாபிஷேகத்தை தரிசித்தால் போதும்.
வி.கந்தசாமி, எம்.ஆர்.என்.நகர், கள்ளக்குறிச்சி: இளம்வயதினர் ஸ்படிக மாலை அணியலாமா...
அணிந்தால் பக்தி அதிகரிக்கும்.
அ.ரவீந்திரன், மணிகெட்டி பொட்டல், கன்னியாகுமரி: துளசி மாலையில் தங்கம், வெள்ளியால் பூண்(காப்பு) இருக்கலாமா?
துளசிமாலை மட்டுமின்றி எந்த மணிமாலையிலும் பூண் இருக்கலாம்.
கி.சிவரஞ்சனி, ராஜபாளையம், விருதுநகர்: வாஸ்து நாளில் போர்வெல் தோண்டி பூஜை செய்யலாமா?
பூஜை செய்யலாம்.

