தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 04, 2026 02:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 02:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணேஷ்.கே, ராயபுரம், சென்னை: ஞாபக சக்தி வளர...

புரிந்து படிப்பதும், அதை சிந்திப்பதும், பார்க்காமல் எழுதிப் பார்ப்பதும் அவசியம். வல்லாரைக்கீரையை உண்ணுங்கள்.

பாலன்.எம், திருநள்ளாறு, புதுச்சேரி: கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்க...

ஞாயிறன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

ஆர்த்தி.ஏ, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: பதினாறு பேறுகளில் முக்கியமானது எது?

பக்தி. மற்ற பேறுகளை பக்தியால் பெறலாம்.

முருகன்.பெ, சென்னிமலை, திருப்பூர்: உறவுகளிடம் பகை இல்லாமல் வாழ...

தவறு செய்யாதவர் யாருமில்லை. உறவு நீடிக்க விட்டுக் கொடுங்கள்.

ராம்.ரா, சின்னமனுார், தேனி: கணவர் செய்த சிவபூஜையை அவர் மறைவுக்குப் பின் மனைவி தொடரலாமா?

தொடரலாம். அவர் விட்டுச் சென்ற நல்லவைகளை தொடருங்கள்.

அருண்குமார்.கோ, அய்யாதோப்பு, கன்னியாகுமரி: திருமணத்திற்கு நாள் குறித்த பின் இறப்புக்கு செல்லலாமா?

மணமக்களும், அவர்களின் பெற்றோரும் செல்லக் கூடாது.

சித்ரா.வி, வத்திராயிருப்பு, விருதுநகர்: மொட்டை மாடியில் தானாக வளர்ந்த அரச மரத்தை அகற்றலாமா?

அகற்றுவதில் தவறில்லை.

கிரிஜா.கு, வீரவநல்லுார், திருநெல்வேலி: அடுக்கு மாடி குடியிருப்பில் கோலம் இடலாமா?

உங்கள் வீட்டு வாசலில் கோலமிடுவதில் தவறில்லையே...

பூர்ணா.பா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: எருமை சாணத்தில் வாசல் தெளிக்கலாமா?

பசுஞ்சாணமே நல்லது. இல்லாவிட்டால் இதை பயன்படுத்துங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us