தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 18, 2026 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 07:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்வதி.ஏ, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: அரோகரா ஏன்?

துன்பத்தை போக்கும் முருகா... உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.

லட்சுமி.பி, சென்னிமலை, திருப்பூர்: ஜாதகத்தில் குருபலம் இல்லாவிட்டால்...

வியாழன் தோறும் விரதம் இருங்கள். திருமண யோகம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி உண்டாகும்.

சரஸ்வதி.எம், கோயம்பேடு, சென்னை: ஜபம் செய்யும் போது விரல் விட்டு எண்ணலாமா?

எண்ணலாம். ஆனால் ஜபமாலை பயன்படுத்துவது நல்லது.

துர்கா.டி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: பாக்கெட் பாலில் அபிஷேகம் செய்யலாமா?

செய்யலாம். பசும்பாலில் செய்வது மிகவும் நல்லது.

அபிராமி.க, முத்தியால்பேட்டை, புதுச்சேரி: மந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்...

ஜபிப்பவரை கவசம் போல அது பாதுகாக்கும்.

சங்கவி. எஸ், சங்கரன்கோவில், தென்காசி: தினமும் வீட்டில் பூஜை செய்தால்...

மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறும்.

சாம்பவி.ஆ, திருமங்கலம், மதுரை: ஹனுமனுக்கு வீட்டிலேயே வடை மாலை சாத்தலாமா?

சாத்தலாம்.முடிந்தால் அருகிலுள்ள குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுங்கள்.



லலிதா.கா, கொட்டாரம், கன்னியாகுமரி: கடன் தொல்லையால் சிரமப்படுகிறேன். பரிகாரம் உண்டா...

செவ்வாய் தோறும் விநாயகரை வழிபடுங்கள்.

சிவகாமி.மு, கல்யாண்புரி, டில்லி: மாரியம்மனுக்கு எலுமிச்சை மாலை சாத்தினால்...

திருஷ்டி, நோய், எதிரி தொல்லை, தடைகள் விலகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us