sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 17, 2023 01:24 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீடுகள்தோறும் காலை, மாலையில் கேட்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.

* குழந்தைகளுக்கு அறிவுரைகளை கூறுபவர் தந்தை. அந்த தந்தையே தன் குழந்தையிடம் உபதேசம் பெற்றால் எப்படி இருக்கும். ஆம். முருகப்பெருமான் குருநாதராக சிவபெருமானுக்கு உபதேசித்த தலம் சுவாமிமலை.

* திருச்செந்துார் கோயிலில் ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடினார்.

* முருகனின் நாமத்தை எப்போதும் ஜபித்துக்கொண்டிருந்த பெண் அடியவர்தான் முருகம்மையார்.

* சித்தர்கள் வாழும் மலை, மூலிகைகள் நிறைந்த மலை என சிறப்புகளை கொண்ட தலம்தான் பழநி. இதனால்தான் இத்தலம் 'சித்தன் வாழ்வு' என குறிப்பிடப்படுகிறது.

* ராமேஸ்வரத்தில் பிறந்தவர்தான் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இவர் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார்.

* திருப்புகழை பாடிய அருணகிரிநாதர் முருகப்பெருமானை வணங்க தனக்கு 4000 கண்கள் என வேண்டும் என பிரார்த்தித்தார்.






      Dinamalar
      Follow us