sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 22, 2023 04:42 PM

Google News

ADDED : டிச 22, 2023 04:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.லதா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

*பணக்கஷ்டத்திற்கு தீர்வு சொல்லுங்கள்

கார்த்திகையன்று விரதமிருந்து முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள். மலைக்கோயிலாக இருந்தால் கிரிவலம் செல்லுங்கள்.

எல்.கார்த்திகேயன், ராதாபுரம், திருநெல்வேலி.

*பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்

பொன் என்பது பணத்தையும், புதன் என்பது அறிவையும் குறிக்கும். கல்வியை பெறுவது அரிய விஷயம் என்பது இதன் பொருள்.

டி.மித்ரா, வாஸ்காஸ், டில்லி.

*தெய்வங்கள் இடையே உறவுமுறை இருப்பது ஏன்?

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்த, தெய்வங்கள் தங்களுக்குள் உறவுமுறைகளை ஏற்படுத்தி வாழ்ந்து காட்டினர். உதாரணமாக மகாவிஷ்ணுவும், பார்வதியும் அண்ணன் தங்கை உறவு.

வி.கண்ணம்மா, வில்லுக்குறி, கன்னியாகுமரி.

*என் வீட்டு வாசலில் பசு சாணமிட்டது. இது நல்லதா?

இது நல்ல சகுனம். அப்போது பசுவுக்கு வாழைப்பழம், கீரை கொடுப்பது விசேஷம்.

எஸ்.ரேணுகா, மடிக்கேரி, மைசூரு.

*பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்யலாம்?

அதிகாலை 4:30 - 6:00 மணி பிரம்ம முகூர்த்தம். அப்போது யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜைகள் செய்யலாம்.

எம்.பவானி, கள்ளிக்குடி, மதுரை.

*காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றலாமா?

காமாட்சி விளக்கு ஏற்றும் வீட்டில் தெய்வம் குடியிருக்கும்.

ஆர்.அனன்யா, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*குழலுாதும் கிருஷ்ணர் படம் பூஜையறையில் இருக்கலாமா...

குழலுாதியபடி பசுக்களை மேய்த்தார் கிருஷ்ணர். அதனால் வள்ளல் போல பசுக்கள் பாலைச் சொரிந்தன. கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள்.

எஸ்.அபினவ், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. இதை 'புருஷார்த்தம்' என சொல்வர். தர்மவழியில் வாழ்தல், நேர்மையாக சம்பாதித்தல், மனைவி, குழந்தைகளுடன் வாழ்தல், கடவுளை சரணடைந்து மோட்சம் அடைதல்.

சி.கிருத்திகா, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?

ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தையின்மை,

அற்ப ஆயுள் உண்டாகும். இதிலிருந்து விடுபட அரச மரத்தடியில் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவர்.

எம்.பரத், வில்லிவாக்கம், சென்னை.

*கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?

மலையைப் பொறுத்து எண்ணிக்கை மாறும். திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்கும். சிறிய மலைகளை மூன்று முறை சுற்றலாம்.






      Dinamalar
      Follow us