sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 22, 2023 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2023 04:42 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.லதா, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

*பணக்கஷ்டத்திற்கு தீர்வு சொல்லுங்கள்

கார்த்திகையன்று விரதமிருந்து முருகன் கோயிலில் விளக்கேற்றுங்கள். மலைக்கோயிலாக இருந்தால் கிரிவலம் செல்லுங்கள்.

எல்.கார்த்திகேயன், ராதாபுரம், திருநெல்வேலி.

*பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்

பொன் என்பது பணத்தையும், புதன் என்பது அறிவையும் குறிக்கும். கல்வியை பெறுவது அரிய விஷயம் என்பது இதன் பொருள்.

டி.மித்ரா, வாஸ்காஸ், டில்லி.

*தெய்வங்கள் இடையே உறவுமுறை இருப்பது ஏன்?

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்த, தெய்வங்கள் தங்களுக்குள் உறவுமுறைகளை ஏற்படுத்தி வாழ்ந்து காட்டினர். உதாரணமாக மகாவிஷ்ணுவும், பார்வதியும் அண்ணன் தங்கை உறவு.

வி.கண்ணம்மா, வில்லுக்குறி, கன்னியாகுமரி.

*என் வீட்டு வாசலில் பசு சாணமிட்டது. இது நல்லதா?

இது நல்ல சகுனம். அப்போது பசுவுக்கு வாழைப்பழம், கீரை கொடுப்பது விசேஷம்.

எஸ்.ரேணுகா, மடிக்கேரி, மைசூரு.

*பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன செய்யலாம்?

அதிகாலை 4:30 - 6:00 மணி பிரம்ம முகூர்த்தம். அப்போது யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜைகள் செய்யலாம்.

எம்.பவானி, கள்ளிக்குடி, மதுரை.

*காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றலாமா?

காமாட்சி விளக்கு ஏற்றும் வீட்டில் தெய்வம் குடியிருக்கும்.

ஆர்.அனன்யா, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.

*குழலுாதும் கிருஷ்ணர் படம் பூஜையறையில் இருக்கலாமா...

குழலுாதியபடி பசுக்களை மேய்த்தார் கிருஷ்ணர். அதனால் வள்ளல் போல பசுக்கள் பாலைச் சொரிந்தன. கிருஷ்ணர் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பாள்.

எஸ்.அபினவ், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*நாலும் தெரிஞ்சா நல்லா இருக்கலாம் என்கிறார்களே...

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. இதை 'புருஷார்த்தம்' என சொல்வர். தர்மவழியில் வாழ்தல், நேர்மையாக சம்பாதித்தல், மனைவி, குழந்தைகளுடன் வாழ்தல், கடவுளை சரணடைந்து மோட்சம் அடைதல்.

சி.கிருத்திகா, பெதப்பம்பட்டி, திருப்பூர்.

*அரசமரத்தடியில் நாகர் சிலை இருப்பது ஏன்?

ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தையின்மை,

அற்ப ஆயுள் உண்டாகும். இதிலிருந்து விடுபட அரச மரத்தடியில் நாகர் சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவர்.

எம்.பரத், வில்லிவாக்கம், சென்னை.

*கிரிவலம் ஒருமுறைக்கு மேல் சுற்றலாமா?

மலையைப் பொறுத்து எண்ணிக்கை மாறும். திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றவே மூச்சு வாங்கும். சிறிய மலைகளை மூன்று முறை சுற்றலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us