நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* 'மரா'என தொடர்ந்து உச்சரித்து 'ராம' காவியமாகிய ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி.ஹிந்து மக்களின் தாரக மந்திரம் ராம நாமம்.
* என்றும் சிரஞ்சீவியான வாயுபுத்திரனாகிய அனுமன் ராமபிரானின் உண்மைத் தொண்டர். அவருக்கு ராம நாமமே உயிர் மூச்சு. இம்மந்திரத்தை உச்சரித்து கடலை
கடந்தவர் அவரே.
* ராமபிரானின் வெற்றியை அனுமன் சுருக்கமாக சீதாதேவிக்கு தெரிவித்த மந்திரம் ஸ்ரீராமஜெயம்.
* ராம பாணத்தை விட ராம நாமமே சிறந்தது என நிருபித்து சேது பாலத்தை உருவாக்கினர் வானர படைகள்.
* முக்தி தலங்கள் ஏழினுள் ஒன்றான காசியிலுள்ள சிவபெருமான், 'ராம' என்னும் நாமத்தை உயிர்களின் காதில் உபதேசிக்கிறார்.
* மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரம் பத்து. அதில் மூன்று 'ராம'என்னும் பெயர்களை கொண்டது. பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்.