sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 16, 2024 03:14 PM

Google News

ADDED : பிப் 16, 2024 03:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.யமுனா, திருப்பரங்குன்றம், மதுரை.

*கோபூஜை செய்ய ஏற்ற நாள் எது?

தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை - சகல நன்மையும், அமாவாசை - முன்னோர் ஆசியும் கிடைக்கும்.

டி.அனிதா, மேல்மலையனுார், விழுப்புரம்.

*சூலத்தன்று பயணம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?

குலதெய்வத்தை வழிபட்டுச் செல்லுங்கள்.

டி.தீபிகா, ஆஸ்ரம், டில்லி.

*அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?

தீயில் சுட்டால் தங்கம் ஒளி விடுவது போல, துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். நாளடைவில் அவனே ஞானியாகிறான்.

மு.கணேஷ், வால்பாறை, பொள்ளாச்சி.

*திருமணமான பெண்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வழிபடலாமா?

வழிபடலாம்.

எஸ்.திருவெண்காடன், கொட்டாரம், கன்னியாகுமரி.

*புனரபி ஜனனம்; புனரபி மரணம் - பொருள் என்ன?

பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலில் இது உள்ளது.

பி.சிந்துஜா, மடிக்கேரி, மைசூரு.

*சுவாமிக்கு புழுங்கல் அரிசி நைவேத்யம் செய்யலாமா?

பச்சரிசியில் மட்டும் நைவேத்யம் செய்ய வேண்டும்.

ம.ரேஷ்மா, ஆய்க்குடி, தென்காசி.

*மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?

தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று துாண்டி விட்டது. மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அது பிறந்தது.

சி.பார்வதி, கோம்பை, தேனி.

*சிறந்தது வழிபாடா... தொண்டா...

இரண்டும் சிறந்ததே. ஆனால் வழிபாட்டுடன் தொண்டு செய்வது நல்லது.

ஆர்.மைதிலி, திருத்தணி, திருவள்ளூர்.

*நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்களே...

இக்கட்டான சூழலில் இருப்பவர் (நலிந்தவர்) நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பது இதன் பொருள்.






      Dinamalar
      Follow us