sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : பிப் 16, 2024 03:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 03:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.யமுனா, திருப்பரங்குன்றம், மதுரை.

*கோபூஜை செய்ய ஏற்ற நாள் எது?

தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை - சகல நன்மையும், அமாவாசை - முன்னோர் ஆசியும் கிடைக்கும்.

டி.அனிதா, மேல்மலையனுார், விழுப்புரம்.

*சூலத்தன்று பயணம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?

குலதெய்வத்தை வழிபட்டுச் செல்லுங்கள்.

டி.தீபிகா, ஆஸ்ரம், டில்லி.

*அதிக துன்பத்திற்கு மனிதன் ஆளாகிறானே...ஏன்?

தீயில் சுட்டால் தங்கம் ஒளி விடுவது போல, துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். நாளடைவில் அவனே ஞானியாகிறான்.

மு.கணேஷ், வால்பாறை, பொள்ளாச்சி.

*திருமணமான பெண்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வழிபடலாமா?

வழிபடலாம்.

எஸ்.திருவெண்காடன், கொட்டாரம், கன்னியாகுமரி.

*புனரபி ஜனனம்; புனரபி மரணம் - பொருள் என்ன?

பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலில் இது உள்ளது.

பி.சிந்துஜா, மடிக்கேரி, மைசூரு.

*சுவாமிக்கு புழுங்கல் அரிசி நைவேத்யம் செய்யலாமா?

பச்சரிசியில் மட்டும் நைவேத்யம் செய்ய வேண்டும்.

ம.ரேஷ்மா, ஆய்க்குடி, தென்காசி.

*மற்றவர் ஏற்றிய தீபம் அணைந்தால் அதை நாம் ஏற்றலாமா?

தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று துாண்டி விட்டது. மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அது பிறந்தது.

சி.பார்வதி, கோம்பை, தேனி.

*சிறந்தது வழிபாடா... தொண்டா...

இரண்டும் சிறந்ததே. ஆனால் வழிபாட்டுடன் தொண்டு செய்வது நல்லது.

ஆர்.மைதிலி, திருத்தணி, திருவள்ளூர்.

*நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்களே...

இக்கட்டான சூழலில் இருப்பவர் (நலிந்தவர்) நாள், நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்பது இதன் பொருள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us