sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 01, 2024 01:04 PM

Google News

ADDED : மார் 01, 2024 01:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.சஞ்சனா, மேலுார், மதுரை.

*சிறப்பான முகூர்த்தம் எது?

பிரதமை, அஷ்டமி, நவமி, பவுர்ணமி, அமாவாசையை தவிர, மற்ற திதிகளில் வரும் முகூர்த்தம் சிறப்பானவை.

எம்.ஆர்த்தி, சிங்காநல்லுார், கோயம்புத்துார்.

*குழந்தை இல்லாவிட்டால் தெய்வத்தை மானசீகமாக தத்து எடுக்கலாமா?

தத்து எடுப்பது தம்பதியரின் தனிப்பட்ட விஷயம். மன அமைதிக்கு வழிபாட்டில் ஈடுபடுவதே தீர்வு.

பி.ஸ்ரீநிதி, திருவட்டாறு, கன்னியாகுமரி.

*திருமணமான பெண்களின் கடமை என்ன?

தர்மநெறி தவறாமல் ஆண்களை வழிநடத்துவது இவர்களின் கடமை.

எம்.அவந்திகா, குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி.

*தேவகுரு(பிரகஸ்பதி)வும், அசுரகுரு(சுக்கிரன்)வும் ஒரே ராசியில் இருந்தால்……

இருவரும் இருக்கும் ராசி, லக்னத்தைப் பொறுத்து நன்மை, தீமை வரும்.

எல்.ரஞ்சனி, திருப்போரூர், செங்கல்பட்டு.

*ஜீவசமாதி கோயிலை இடித்து அதன் மீது சாலை அமைத்து விட்டனர். என்ன செய்யலாம் ?

இப்படியும் நடக்கிறதே... வேறிடத்தில் கோயில் கட்டி பூஜை நடத்துங்கள்.

கே.ஆனந்தன், உடன்குடி, துாத்துக்குடி.

*எங்கள் வீட்டில் குளவிகள் கூடு கட்டியுள்ளன. அதை கலைக்கலாமா?

கர்ப்பிணி வாழும் வீட்டில் குளவிகள் கூடு கட்டினால் கலைக்கக் கூடாது. மற்றபடி கலைத்தால் தவறில்லை.

கே.பவானி, சன்னபட்னா, பெங்களூரு.

*கடவுள் பாடல்களில் அவன், இவன் என ஒருமை இடம் பெறுகிறதே...

@அன்பின் மிகுதியால் ஒருமையில் பாடுவது மரபு. தகப்பன், பாட்டன், முப்பாட்டன் என நாம் சொல்வதில்லையா...

எம்.ராஜராஜன், திருநின்றவூர், திருவள்ளூர்.

*அலுவல் காரணமாக அமாவாசை, கார்த்திகை நாளில் முடிவெட்டினேன். செய்யலாமா...

அந்த நாளை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் கடன் ஏற்பட வாய்ப்புண்டு.

வி.ஜனனி, வடமதுரை, திண்டுக்கல்.

*விரத நாளில் நோயாளிகளுக்கு கட்டுப்பாடு உண்டா...

இல்லை. விரத நியமங்களை முடிந்தளவு பின்பற்றுங்கள். தலைகுளிப்பது, கோயிலுக்கு செல்வதில் மட்டும் விலக்கு உண்டு.

சி.கங்கா, பப்பன்கிலேவ், டில்லி.

*சிலர் எதை சொன்னாலும் 'ததாஸ்து' என்கிறார்களே...

அப்படியே ஆகட்டும்' என பொருள். அதாவது நல்ல விஷயத்தைக் கேட்கும் போது 'நல்லதே நடக்கட்டும்' என ஆசியளிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us