sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 15, 2024 11:11 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தர்மம் தலை காக்கும் என்பது ஏன்?

ஜே.கார்த்திக், காரைக்குடி, சிவகங்கை.

பலன் கருதாமல் செய்யும் தர்மம் தலையெழுத்தை மாற்றும். இதையே 'தர்மம் தலை காக்கும்' என்றனர்.

*விரதத்தன்று சிலர் உப்பு சேர்ப்பதில்லையே...

எல்.புவனேஷ், பகாட் கஞ்ச், டில்லி.

சுவை மட்டுமின்றி காம, குரோத எண்ணத்தையும் உப்பு தரும். இதை தவிர்க்க உப்பு சேர்ப்பதில்லை.

*விரதத்தன்று சாப்பிடாமல் இருந்தால் போதுமா...

எஸ்.வர்ஷிகா, குளச்சல், கன்னியாகுமரி.

விரதத்தின் நோக்கம் சுயகட்டுப்பாடு. பசி பொறுப்பதோடு மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களை அடக்குவது அவசியம்.

*வெள்ளியன்று பசுவைப் பார்த்தால் நல்லதாமே...

வி.சந்தோஷ், மாகடி, பெங்களூரு

வெள்ளியன்று அதிகாலையில் பசுவை தரிசிப்பதுடன் வலம் வந்து வணங்கினால் சுபநிகழ்ச்சி நடக்கும். கடன் பிரச்னை தீரும். நிம்மதி கிடைக்கும்.

*கோயில் பிரகாரத்தில் துாங்கலாமா?

கே.சுபாஷினி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி

கோயில் பிரகாரத்தில் ஓய்வுக்காக உட்காரலாம்.

*வேண்டுதல் வைத்து வழிபாடு செய்கிறேன். இன்னும் நிறைவேறவில்லையே...

எம்.மித்ரா, வால்பாறை, பொள்ளாச்சி

நியாயமான வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். பிறருக்கு தீங்கு நினைத்தால் எதிர்மறை பலன் உண்டாகும்.

*அஷ்டமி தவிர்த்த மற்ற நாளில் பைரவரை வழிபடலாமா...

எல்.ஷிவானி, சின்னமனுார், தேனி.

பைரவர் உள்ளிட்ட எந்த தெய்வத்தையும் எந்த நாளிலும் வழிபடலாம்.

*கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் முரணாக பேசுவோரிடம் எப்படி பழகுவது?

ஏ.சங்கர், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

இது போன்ற கெட்ட குணங்கள் கொண்டவர்களை விட்டு விலகுங்கள்.

*அஹம் பிரம்மாஸ்மி என்றால் என்ன?

பி.ஹரிணி, இலஞ்சி, தென்காசி.

'உனக்குள்ளே கடவுள் இருக்கிறார்' அல்லது 'நானே கடவுள்' என்பது இதன் பொருள்.






      Dinamalar
      Follow us