sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 26, 2024 01:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2024 01:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*வியாபாரம் செழிக்க எந்த நாளில் குலதெய்வத்தை வழிபட வேண்டும்?

கே.பூமிகா, திருமாணிகுழி, கடலுார்.

ஞாயிறன்று சூரிய ஹோரையில் (காலை 6:00 - 7:00 மணிக்குள்) வழிபட்டால் வியாபாரம் செழிக்கும்.

*வில்வக்காயை வீட்டில் வழிபடலாமா...

எம்.கோபி, ஐ.டி.ஐ., பெங்களூரு.

வில்வம் பழத்தை மகாலட்சுமியாக கருதி வீட்டில் வழிபடலாம். இதனால் பணத்தட்டுப்பாடு, கடன்பிரச்னை மறையும்.

*கோயிலில் உச்சிக்கால பூஜையை தரிசித்தால் என்ன கிடைக்கும்?

கே.அருண், கீர்த்திநகர், டில்லி.

நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் கிடைக்கும்.

*போலியான செயல்களை கவுரவத்திற்காக செய்கிறோமே சரியா...

பி.ரஞ்சனி, சோழவந்தான், மதுரை.

சரியில்லை. நேர்மையாக இருந்தால் உண்மையான கவுரவம் தேடி வரும்

*துறவிகளை, 'பூஜ்யஸ்ரீ' என அழைப்பது ஏன்?

எஸ்.அகிலேஷ், சமத்துார், கோயம்புத்துார்.

பணம், புகழ், பட்டம், பதவி என ஆசைப்படாமல் வாழும் துறவியரை 'பூஜ்யஸ்ரீ' என அழைக்கிறோம்.

*ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும் என்கிறார்களே...

வி.மீனாட்சி, கடையம், தென்காசி.

நல்ல சொற்களால் நன்மையும், கெட்ட சொற்களால் தீமையும் உண்டாகும் என்பது இதன் பொருள்.

*வாஸ்து நேரத்தில் எப்போது பூமிபூஜை நடத்த வேண்டும்?

சி.லதா, கோவிந்தவாடி, காஞ்சிபுரம்.

வாஸ்து நேரம் 90 நிமிடம். அதை ஐந்தாகப் பிரித்து கடைசி பகுதியான 18 நிமிடத்தில் பூமி பூஜை நடத்த வேண்டும்.

*திருஷ்டி சுற்றுவது ஏன்?

எஸ்.ரமணி, வடமதுரை, திண்டுக்கல்.

கெட்ட சக்திகளால் தீங்கு நேராமல் இருக்க திருஷ்டி சுற்றுகிறோம்.

*நெடுஞ்சாண் கிடை என்றால் என்ன?

எல்.சரவணன், அருமனை, கன்னியாகுமரி.

கோயிலில் வழிபாட்டிற்குப் பின், கொடி மரத்தின் முன் முழு உடம்பும் தரையில் படும்படி விழுந்து வணங்குவது நெடுஞ்சாண் கிடை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us