sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 12, 2024 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 08:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*பேராசை உள்ளவர்களை எப்படி திருத்துவது?

ஜி.பானு, திர்லோக்புரம், டில்லி.

பணத்தால் சாதிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். பணம் மட்டும் மகிழ்ச்சி தராது. அவர்கள் திருந்த தெய்வத்தை வேண்டுங்கள்.

*அதிதேவதை என்பது யாரைக் குறிப்பிடுகிறது?

கே.சாய்சரண், பணகுடி, திருநெல்வேலி.

நவக்கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் அதிதேவதை உண்டு. இவர்களை வழிபட்டால் கிரகதோஷம் மறையும். உதாரணமாக கேதுதோஷம் தீர அதன் அதிதேவதையான விநாயகரை வழிபடுங்கள்.

*தந்தை, குழந்தைகளின் உறவு பலம் பெற...

ஜி.பிரகாஷினி, சோழிங்கநல்லுார், சென்னை.

ஞாயிறு தோறும் சூரிய ேஹாரையில் (காலை 6:00 - 7:00 மணி) சூரிய பகவானுக்கு தாமரை மலர் சாத்தி வழிபடுங்கள்.

*வீட்டிலேயே சுவாமிக்கு வடைமாலை சாத்தலாமா?

வெ.சாத்விகா, தேவதானப்பட்டி, தேனி.

வடைமாலை சாத்தலாம். அக்கம் பக்கத்தினருக்கு கட்டாயம் வடையை பிரசாதமாக கொடுங்கள்.

*சுவாமிக்கு எலுமிச்சை மாலை சாத்துவது ஏன்?

பி.விநாயக்ராம், மாகடி, பெங்களூரு.

எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்பது இதன் நோக்கம். மேலும் நோய், எதிரி தொல்லை, திருஷ்டி, தடை விலகும்.

*சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே போகலாமா...

பி.ஸ்வேதா, திருநகர், மதுரை.

சிவன்(சத்தியம்), நந்தி(தர்மம்) இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கோயில்களில் இருப்பர். இவர்களின் குறுக்கே போவது பாவம்.

*வெளியே செல்ல வேண்டியிருந்தால் விளக்கை சீக்கிரமாக ஏற்றலாமா?

வி.கிருஷ்ணா, நெய்வேலி, கடலுார்.

வெளியே கிளம்புவதற்கு முன்பே விளக்கை ஏற்றுங்கள். வீட்டை பூட்டும் முன் விளக்கை அமர்த்துங்கள்.

*நெல்லி மரம் வீட்டில் வளர்க்கலாமா?

வி.அட்சயா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

வளர்க்கக் கூடாது. நெல்லி மரத்தை தோட்டம் அல்லது வயலில் வளர்க்கலாம்.

*கொடிமரம் உள்ள கோயில், இல்லாத கோயில் - பலனில் வேறுபாடு உண்டா?

பி.கவுதம், திருவட்டாறு, கன்னியாகுமரி.

வேறுபாடு இல்லை. கொடிமரம் உள்ள கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us