sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 03, 2024 08:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 08:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*தீபாராதனையின் போது கண்களை மூடி வழிபடலாமா...

கே.கேஷிகா, பல்லடம், திருப்பூர்.

கண்களைத் திறந்து கடவுளை தரிசித்தபடி வழிபடுங்கள். மனம், புத்தி தெளிவடையும்.

*வாத நோய்க்கு எந்த கோயிலுக்கு வேண்டிக் கொள்ளலாம்?

எஸ்.ரம்யா, சிதம்பரம், கடலுார்.

தினமும் மாலையில் விளக்கேற்றி குருவாயூரப்பனை வழிபடுங்கள்.

*திருமணஞ்சேரி கோயிலில் கொடுத்த பிரார்த்தனை மாலை தொலைந்து விட்டது. என்ன செய்யலாம்?

பி.லாவண்யா, கல்யாண்புரி, டில்லி.

திருமணஞ்சேரி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு பூமாலை சாத்தி மீண்டும் அர்ச்சனை செய்யுங்கள். அதை பிரார்த்தனை மாலையாக வைத்துக் கொள்ளுங்கள்.

*தெய்வீக மாநாடு நடத்துவது ஏன்?

பி.ஹரிணி, மடிக்கேரி, மைசூரு.

ஆன்மிகவாதிகளின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

*கருவறைக்குள் பக்தர்கள் உழவாரப்பணி செய்யலாமா?

எம்.துஷ்யந்த், சின்னமனுார், தேனி.

அர்ச்சகர் மூலம் கருவறையை துாய்மைப்படுத்துங்கள்.

*குழந்தைகளுக்கு எத்தனை முத்து உள்ள கொலுசு அணிவிக்க வேண்டும்?

சி.ரித்திகா, கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி.

9, 12 என்ற எண்ணிக்கையில் முத்துக்கள் இருந்தால் கிரகதோஷம் விலகும்.

*எதிரியாகவும், துரோகியாகவும் சிலர் மாறி விடுகிறார்களே....

ஆர்.யாமினி, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

சிரித்த முகத்துடன் பழகினால் எதிரி என்பதே இல்லை. பொறாமை உடையவர்கள் தான் துரோகியாக மாறுவார்கள். அவர்களிடம் இருந்து கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.

*ராஜதானி என்றால்...

ஜி.வைசாலி, பசுமலை, மதுரை.

'ராஜ' என்றால் மன்னர். 'தானி' என்றால் இடம். மன்னர் வசிக்கும் இடம் அல்லது தலைநகரம் என்பது இதன் பொருள்.

*அர்ச்சாவதாரம் என்றால் என்ன?

எல்.சித்தார்த், நாகர்கோவில், கன்னியாகுமரி.

'அர்ச்ச' என்றால் 'பூஜை'. கண்ணுக்குத் தெரியாத கடவுளை சிலை வடிவில் வழிபடுவது அர்ச்சாவதாரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us