sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 10, 2024 11:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2024 11:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*மகாலட்சுமியின் அருள் பெற தகுதிகள் என்ன?

இ.பவித்ரா, ஐ.டி.பார்க், டில்லி.

உண்மை, பக்தி, உதவும் குணம் கொண்டவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

*முக்கிய நிகழ்வின் போது பெரியவர்களிடம் திருநீறு வாங்குவது ஏன்?

எம்.ஜனனி, ராமநாதபுரம், கோவை.

பெரியவர்களிடம் ஆசி பெற்று, திருநீறு பூசிக் கொண்டால் வெற்றி கிடைக்கும்.

*பூஜையறையில் எந்த திசை நோக்கி குபேரர் இருக்க வேண்டும்?

எஸ்.ஆருத்ரா, பல்லாவரம், சென்னை.

பூஜையறையில் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

*நுாறாண்டு வாழ்க என வாழ்த்துவது ஏன்?

ஜே.காவ்யா, குஜிலியம்பாறை, திண்டுக்கல்.

'சதாயு புருஷ:' என வேதம் நம்மை வாழ்த்துகிறது. இதன் அடிப்படையில் தான் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர்.

*அஷ்ட ஐஸ்வர்யம் என்பது என்ன?

கே.ஜன்விகா, பூவரசன்குப்பம், விழுப்புரம்.

உடல்நலம், செல்வாக்கு, ஆளுமைத்திறன், உறவினர், தங்கம், நவரத்தினம், செல்வம், பணியாளர்கள் ஆகியன அஷ்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள்).

*அப்பிரதட்சிணம் (வலமிருந்து இடமாக சுற்றுதல்) செய்தால் பலன் கிடைக்குமா?

ஏ.சஞ்சீவ், சுரண்டை, தென்காசி.

பிரதோஷத்தன்று (மாலை 4:30 - 6:00 மணி) வலமிருந்து இடமாக சுற்றலாம். மற்ற நேரத்தில் சுற்றக் கூடாது.

*அட்சய திரிதியை அன்று தென்னங்கன்றை தானம் செய்யலாமா?

பி.சிவதர்ஷன், சோழவந்தான், மதுரை.

செய்யலாம். முடிந்தால் உணவு, உடை, பண உதவி செய்யுங்கள்.

*அருளாளர்கள் தன்னை தாழ்வாக கருதுவது ஏன்?

எம்.அபிநந்திகா, திருத்தணி, திருவள்ளூர்.

தங்களைத் தாழ்வாக கருதுபவரே அருளாளர். மாணிக்கவாசகர், 'நாயிற் கடையாய் கிடந்த அடியேன்' என திருவாசகத்தில் பாடியுள்ளார்.

*பல்லி சொல்லும் பலன் யாது?

சி.தனமிதுன், திருவட்டாறு, கன்னியாகுமரி.

நல்ல விஷயத்தை பேசும் போது பல்லி சத்தமிட்டால் அது நிறைவேறும்.

*குபேரனின் வாகனம் என்ன?

டி.ரியாஸ்ரீ, சிவாஜிநகர், பெங்களூரு.

பூதகணம். இறந்த ஆன்மாக்களுக்கு இன்பம் தருபவர் குபேரன். அதனால் இவர் மனிதனை வாகனமாக (நரவாகனம்) கொண்டிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us