
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லை என புலம்புகிறீர்களா... புலம்பல் தீர இதை பின்பற்றுங்கள்.
* பெற்றோர்களை வணங்குங்கள்
* பெண்களை அழ விடாதீர்கள்.
* வீட்டை துாய்மையாக வையுங்கள்.
* வீண் பேச்சு பேசாதீர்கள்.
* பணம் வைக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாதீர்கள்.
* பணத்தை கையாளும் போது அவசரப்படாதீர்கள்.
* பணத்தை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.
* சில்லறைகளை சிதற விடாதீர்கள்.
* ரூபாய் நோட்டை கசக்கவோ எழுதவோ வேண்டாம்.
* ரூபாய் நோட்டை வரிசையாக அடுக்கி வையுங்கள்.
* மணிபர்சை முன்பையில் வையுங்கள்.
* பணம் சேமிக்கும் உண்டியலை அடிக்கடி எடுத்து குலுக்கி பார்க்காதீர்.
* விருந்தினரை உபசரியுங்கள்
* பணம் பற்றி பேசினால் முரணாக பேசாதீர்.
* ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது, 'என்னால் தான் இவனுக்கு வாழ்வு வந்தது' என ஆணவம் கொள்ளாதீர்கள்.
* நேரம் பார்க்காமல் உதவி செய்யுங்கள்.
* முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்.
* குருஹோரையில் பணத்தை புழங்குங்கள். (வியாழன் காலை 6:00 - 7:00, மதியம் 1:00 - 2:00, இரவு 8:00 - 9:00) பணம் கையை விட்டு போனாலும் திரும்ப உங்களிடமே வந்து விடும்.
* கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, இடரினும் தளரினும்... போன்ற பதிகங்களை தினமும் கேளுங்கள்.
* அம்பிகையின் சன்னதியில் உங்கள் பிரார்த்தனைகளை வாய்விட்டு சொல்லுங்கள். அவளின் கடைக்கண் பார்வை கிடைக்கும்.
* நீங்கள் அழைக்காமலே உங்க வீட்டுக்கு குபேரன் வந்து அருள்புரிவார்.
* சுவாமி படத்தை துடைத்து பூ வையுங்கள்.
* பீரோவை வடகிழக்கு திசை பார்த்து வையுங்கள்.