
ஜி.பானு, திர்லோக்புரம், டில்லி.
*தர்மத்தை பின்பற்றும் வயது...
விபரம் தெரிந்த நாளில் இருந்தே தர்மத்தை பின்பற்றலாம். உ.ம். வீட்டில் விளக்கேற்றுதல், பெரியோரை வணங்குதல், பிறருக்கு உதவுதல்.
வி.அட்சயா, ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*சந்தியா தாண்டவம் என்றால்...
பிரதோஷத்தின் போது நந்தியின் கொம்புக்கு இடையே சிவன் ஆடும் நடனம்.
பி.ஸ்வேதா, திருநகர், மதுரை.
*முக்கண்ணன் என சிவனைக் குறிப்பிடும் முதல் நுால் எது?
சங்கநுாலான கலித்தொகை. அதில் 'பிறைநுதல் முக்கண்ணன் உருவே போல் முரண்மிகு குரல்' என்னும் வரி உள்ளது.
கே.ஸ்ரீலட்சுமி, தெரிசனங்கோப்பு, கன்னியாகுமரி.
*சிறிய கோயில்களில் கிரிவலம் சுற்றலாமா?
எந்த மலைக்கோயிலை சுற்றி வந்தாலும் பலன் ஒன்றுதான்.
பி.கவுதம், திருத்தணி, திருவள்ளூர்.
*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் எனச் சொன்னவர்...
மகாகவி பாரதியார். இவர் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பீமனிடம் அர்ஜூனன் சொல்வதாக இதைக் குறிப்பிட்டுள்ளார்.
வி.கிருஷ்ணா, நெய்வேலி, கடலுார்.
*கோயிலுக்கு வந்த பக்தர்கள் தரும் பழம், பூக்களை வாங்கலாமா?
பக்தர்கள் தரும் பழம், பூக்கள் கடவுளின் பிரசாதமே. அதனால் வாங்கலாம்.
வெ.சாத்விகா, பழநி, திண்டுக்கல்.
*தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம் எது?
திருவாரூர் தியாகராஜர் கோயில். அதே போல் எட்டுகால பூஜை நடக்கும் கோயில்களில் தினமும் பிரதோஷ பூஜை நடக்கும். உ.ம். மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை
பி.விநாயக்ராம், மாகடி, பெங்களூரு.
*வரத ஹஸ்தம், அபய ஹஸ்தம் என்கிறார்களே...
ஹஸ்தம் என்றால் கை. வரத ஹஸ்தம் என்றால் வரம் தரும் கை. அபய ஹஸ்தம் என்றால் பயம் போக்கும் கை.
கே.சாய்சரண், பணகுடி, திருநெல்வேலி.
*பிறந்த நட்சத்திரத்தன்று திருமணத்தை நடத்தலாமா?
பிறந்த நட்சத்திரம், பிறந்த நட்சத்திரத்தையும் கணக்கில் கொண்டு அதில் இருந்து 10வது நட்சத்திரம், 19வது நட்சத்திரங்களில் திருமணம் நடத்தக் கூடாது.