ADDED : ஜன 19, 2023 11:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போஜராஜன் அவையில் அரசகவியாக இருந்தவர் மயூரகவிராயர்.
* கண்ணொளி வேண்டி மயூரகவி என்பவர் சூரியபகவானைக் குறித்து பாடிய பாடல்கள் நுாறு. அதற்கு சூரிய சதகம் என்று பெயர்.
* சூரியபகவானின் திருநாமம், அவரின் சிறப்புகள், பெருமை போன்றவற்றை பேசுகிறது இந்நுால்.
* காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சுவர், அங்குள்ள பானுதீர்த்தப் படிக்கட்டுகளில் சூரிய சதக பாடல்கள் கல்வெட்டுகளாக உள்ளது.
* இதுபற்றி காஞ்சி மஹாபெரியவரும் டி.என்.ராமச்சந்திரன் என்பவரும் அளவளாவி மகிழ்ந்துள்ளனர்.
* இந்நுாலுக்கு 14 உரை நுால்கள் உள்ளது.
* சதகப்பாடல்களை படிப்பவர்களுக்கு பாடல்இயற்றும் சக்தி, அறிவு, வலிமை, தேக ஆரோக்யம், நீண்டஆயுள், ஆளுமை, புத்திரபேறு போன்ற செல்வங்களையும் பெறுவர்.

