sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜன 19, 2023 11:27 AM

Google News

ADDED : ஜன 19, 2023 11:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.லட்சுமி நாராயணன். வாழவல்லான், துாத்துக்குடி. *விளக்குபூஜையில் ஐந்துமுக தீபம் ஏற்றலாமா?

ஐந்துமுக தீபம் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். திருமணத்தடை விலகும்.

கே.கீதா, காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு.

*கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றலாமா?

விளக்கேற்ற வேண்டாம். நெய், நல்லெண்ணெய், இலுப்பை, விளக்கெண்ணெய் மட்டும் பயன்படுத்தலாம்.

ம.வைசாலினி, பெங்களூரு.

*கொலுவில் வைத்த பொம்மைகள் நகரும் என்கிறார்களே உண்மையா?

உண்மையில்லை. இப்படியெல்லாம் சொல்லி பிறரை பயமுறுத்தாதீர்கள்.

எம்.நாகஜோதி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.

*வீட்டிலுள்ள சுவாமிக்கு மயில் தோகையால் வீசலாமா?

வீசலாம். இதை அலங்காரமாகவும் பயன்படுத்தலாம்.

கு.தங்கத்துரை, குளச்சல் கன்னியாகுமரி.

*கோயில் கருவறையில் மின்விளக்கு இருக்கலாமா?

மரபுகளை மீறி மின்விளக்குகளை அமைப்பது சரியல்ல. சரவிளக்குகளின் ஒளியில் சுவாமியை காண்பதே மகிழ்ச்சியளிக்கும்.

என்.லட்சுமி, தமிழர் என்கிலேவ், டில்லி.

*கோயில் வழிபாட்டிற்கு வீட்டில் நைவேத்யம் தயாரிக்கலாமா?

தயாரிக்கக் கூடாது. மடப்பள்ளி இல்லையெனில், அர்ச்சகர் வீட்டில் தயாரிக்கலாம்.

ஆர்.ராஜாமணி, பூவரசன்குப்பம், விழுப்புரம்.

*எதிரி தொல்லை, செய்வினை, கிரகதோஷம் போக்க யாரை வழிபடலாம்?

சரபேஸ்வரர்(சிவன்), சக்கரத்தாழ்வாரை (விஷ்ணு) வழிபடலாம்.

இ.நாகராஜன், சாத்துார், விருதுநகர்.

*தலையெழுத்தை மாற்றவே முடியாதா...

முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியத்தால் இப்பிறவி அமைகிறது. இதையே தலைவிதி என்பர். 'முருகப்பெருமானின் திருவடி பட்டதால் என் தலையெழுத்து மாறியது' என்கிறார் அருளாளர் அருணகிரிநாதர். ஆகையால் பக்தியால் மட்டுமே விதியை மாற்ற முடியும்.

ர.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி.

*வளர்ப்பு பிராணிகள் பூஜையறைக்கு வருவது சரிதானா?

பூஜையறை என்பது கோயிலுக்குச் சமம் அங்கு பிராணிகள் வரக் கூடாது. மீறினால் தோஷம் உண்டாகும். தெய்வீக சக்தி குறையும்.

ஆர்.சந்திரசேகரன், அண்ணாநகர் மேற்கு, சென்னை.

*என் சித்தப்பாவின் மகன் இறந்து விட்டார். ஒரு வருடம் கோயிலுக்கு போகக்கூடாதா...

குலதெய்வ வழிபாடு, நேர்த்திக்கடன், முடியிறக்குதல், பண்டிகை, கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். தரிசனத்திற்காக மட்டும் கோயிலுக்குச் செல்லலாம்.






      Dinamalar
      Follow us